-துஷ்யந்தி, இலங்கை

பாரதிகண்ட புதுமைப் பெண்
ஆணுக்குச் சரிநிகர் சரி பாதி
என்றதோடு நின்றிடவில்லை
ஒருபடி மேல் சென்றுவிட்டாள்!

நீர் மேல் நிலையில்லா
நீர்க்குமிழியாம் வாழ்க்கை
அதில் காற்றோடு ஒட்டிய
தூசுகளே பந்தங்கள்!

நீரின் மேல் வள்ளம் போல்
பந்தங்களோடு தடை தாண்டி
வெற்றி இலக்கை அடைவதே
வாழ்வின் உண்மைத் தத்துவம்!

உரிமை பெற்றோம் என
ஒதுங்கி வாழ்ந்திடாது
இன்ப துன்பங்களில்
தோள் கொடுப்போம் – வரும்
விளைவுகளைச் சமமாய்
முகம் கொடுக்கக் கற்றிடுவோம்!

இணைந்த கைகள் எழுப்பும் ஒலி
தனித்த கையில் வருவதில்லை
ஆணவம் நம்மிடை இருக்கும்வரை
வெற்றி நம்மிடம் வருவதில்லை!!

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *