திருஞானசம்பந்தர் குருபூஜை – வைகாசி மூலம்

0

-மீ.விசுவநாதன்

குளக்கரையில் அழும்பிள்ளை குரல்கேட்டுப் பக்கத்தில்
அளப்பரிய அன்புடனே அன்னையவள் பார்வதியும்
பளபளக்கும் ஜோதியெனப் பரவசத்தில் பால்கொடுக்க
மளமளெனப் பாட்டிசைத்த மணிக்குழந்தை அடிபணிவோம் !

பிள்ளையவன் தேன்சொல்லைப் பிரியமுடன் தான்கேட்டு
அள்ளியள்ளி வரங்களையே அந்தசிவன் கொடுத்திடுவார் !
நள்ளிரவில் சுடலையிலே நடனமிடும் நமசிவாயம்
உள்ளிருக்கும் கவியன்றோ உயிர்ஞான சம்மந்தன் !

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *