வள்ளுவ மாலை
–சுரேஜமீ
நெறிவழி வாழ்தல் கடினமெனக் கைவிட்டால்
நேரும்பெருந் துன்பம் அறிவீர்காள் – வந்தவர்
வாழ்வின் நிலைசாற்றிக் காக்கும் திருக்குறள்
போற்றிடச் செய்தல் நலம்!
நலம்பல வேண்டியெங்கும் தேடாதீர் சொல்லிற்
பயன்தரும் வள்ளுவம் வழியாகக் காணும்
இலக்கினிலே இன்பம் திளைத்திருக்க – மாற்றதும்
இங்கில்லை என்ப குறள்!
குறள்சொல் செய்திட வாழ்வு எளிதாகிச்
செல்வழி யாவும் வந்திடும் ஏற்றமும்
சேராப் பழியென்றும்; வானொத்த பேரொடு
வையம் புகழக் காண்!
காண்நிறைக் காட்சியெலாம் இன்பமே உய்யக்
கருப்பொருள் சிந்தையில் வள்ளுவமாக – தீதொரு
பண்புடை மாந்தரும் மண்ணில் இலையென்று
பாரினில் வாழுயிர் வெல்!
வெல்கநாளும் விண்மண் துணையொடு வேண்டும்
வரம்நல்கும் வள்ளுவம் யாவர்க்கும் – போற்றிடப்
புல்முதல் பல்லுயிர்ப் பண்பினை வாய்க்கும்
புனிதமே வாழ்வின் சுவை!