இளமையும் புதுமையும்!
-சாஜஹான்
இளமைப் பருவம் முழுதும்
கவிதை துளிரும் மனதில்
துளிரும் கவிதை மொழிகள்
தெளிவில் அமைய வேண்டும்!
கவிதை எழுதும் சமயம்
கருத்தில் உணர்ந்து எழுது
கவிதை வரியின் எழிலும்
கருத்தில் நிறையும் பொருளும்!
இளைஞர் எமது மனதில்
நிறைவு பெறுதல் வேண்டும்
இளைஞர் எமது கைகள்
எழுதும் கவிதை வரிகள்
உலகில் உயர்வு பெற்றுப்
புதுமை காணவேண்டும்!
இளைஞர் எமது மனதில்
உதிக்கும் கவிதைத் துளிகள்
புதுவுலகு நோக்கி நகரும்
திறமை படைக்க வேண்டும்!
இளைஞர் எமது பணிகள்
மடமை ஒழிக்கும் தடிபோல்
உலகில் திகழ வேண்டும்
நம்கவிதை நாளும் உலகில்
புதுமை படைக்க வேண்டும்
அப்புதுமைக்கு உரிமை எமது
இளமை பெறுதல் வேண்டும்!