-கனவு திறவோன்

புத்தருக்கு ஞானம் தந்த
போதி மரம்
எனக்கு
ஜன்னல் தந்தது
கதவு தந்தது
கட்டில் தந்தது
கோவில் கூரை தந்தது
புத்தரின் சிலையும் தந்தது
எல்லாவற்றையும்
வைத்துக் கொண்டு
ஞானம் தேடுகிறேன்.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *