கவிஞானி ரூமியின் கவிதைகள்
(கி. பி. 1207-1273)
கவிதை -1
தடம் காண முடியாச் சுவடு

ஆங்கில மூலம் : கொலிமன் பார்க்ஸ்
தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

ajay

Poet Rumi’s 800 th Birth Anniversary

முன்னுரை :

பாரசீகக் கவிஞர் ஜெலாலுதீன் ரூமி 1207 ஆம் ஆண்டில் தற்போது ஆஃப்கானிஸ்தான் எனப்படும் பூர்வீகப் பாரசீக தேசத்தில் உள்ள பால்க் (Balkh) என்னும் இடத்தில் பிறந்தவர். சிறுவயதிலேயே மங்கோலியர் படையெடுப்புக்கு அஞ்சி அவரது குடும்பத்தினர் நாட்டை விட்டுத் துருக்கியில் உள்ள கொன்யாவுக்கு ஓட வேண்டியதாயிற்று. அங்குதான் ரூமி தனது வாழ்நாளின் பெரும் பகுதியைக் கடந்தார். நாஷாப்பூரில் (Nashapur) சில காலம் தங்கிய போது கவிஞர் அத்தார் (Poet Attar) அவர்களைச் சந்திக்கும் வாய்ப்பு அவரது குடும்பத்தினருக்குக் கிடைத்தது. ரூமிக்கு வாய்த்த மகாக் குருமார் களில் முதல்வர் (Mentors) கவிஞர் அத்தார். ரூமியின் ஞானக் கொடையை அறிந்த கவிஞர் அத்தார் “அஸ்ரார் நமா” (Asrar Nama – The Book of Secrets) என்னும் நூலை அன்பளிப் பாகக் கொடுத்தார். 1226 இல் ரூமி திருமணம் செய்து கொண்டார். அவருக்கு ஒரு மகன்.

அறிஞராகத் திகழ்ந்த ரூமி டெர்விஸ் (Dervish) இஸ்லாமியக் குரு ஸாம்ஸ் ஆஃப் தபிரிஷ் (Shams of Tabriz) அவர்களை 1244 இல் சந்தித்த பிறகு புத்துயிர் பெற்று அவரது ஆன்மீகச் சிந்தனையில் மகத்தான ஒரு திருப்பம் ஏற்பட்டது. “நெடுங் காலமாய் முன்பு நான் நினைத்து வந்த அந்தக் கடவுளைக் கண்டேன்,” என்று ரூமி அந்த தேவதூதரைக் கண்ட போது பெருமிதம் கொண்டார். மதக்குரு ஸாம்ஸ் அவர்களுக்குப் பிறகு ரூமியின் சிந்தனையைச் செழிக்கத் தூண்டியவர் ஸலாதீன் ஸர்கப் (Saladin Zarkub) பிறகு ஹூஸம் (Husam) என்பவர். கவிஞர் ரூமி பல கவிதைகளில் விளிக்கும் “நீ” என்பது கடவுளா, ஸாம்ஸா அல்லது யார் என்பதை வாசகர்தான் யூகித்துக் கொள்ள வேண்டும்.

ஞானக் கவிஞர் ரூமி ஓர் மதஞானி, பேரறிஞர், இஸ்லாம் மதத்தின் ஒரு தூணாகக் கருதப் படுபவர். 1244 ஆண்டு ஆன்மீகத் திருப்பத் துக்குப் பிறகு ரூமி தனது 38 ஆவது வயது முதல் 24,000 பாக்கள் கொண்ட “மத்னாவி” (Masnavi or Mathnawi) என்னும் தன் படைப்பு நூலை எழுதத் துவங்கினார். அவரது அடுத்த புகழடைந்த நூல் “திவான்-இ-ஸாம்ஸ்-இ-தாமிரிஷ் (Divan-E-Shams-E-Tabriz – The Collective Poems of Shams of Tabriz) என்பது. ரூமியின் கவிதைப் படைப்புகளில் ஒரு வித “மாயப் புதிர்” (Mystic Connotation) புரிந்தும் புரியாத பொருளில் புலப்படும். ரூமியின் பட்டப் பெயர் “மௌலானா”. மௌலானா என்றால் நமது கோமான் (Moulana means our Master) என்று பொருள். ரூமிக்குப் பிடித்த இசைக் கருவி புல்லாங்குழல். பாரசீகப் பாக்களை இசைக் கருவிகள் மூலம் பாடலாம் அல்லது வாசிக்கலாம்.

ரூமியின் கவிதைகள் பன்னாட்டு மொழிகளில் மொழிபெயர்க்கப் பட்டுள்ளன. அவரது ஞானக் கருத்துக்கள் அகில நாடுகளுக்கும் உகந்தவை. கவிஞர் ரூமி கொய்னாவைச் சார்ந்த “மெவ்லெவி மதக்குழு நெறி” (Mevlevi Dervish Order, called Whirling Dervishes) எனப்படும் “இசைப்பா ஆட்டக் குழுவின்” துவக்கப் பிதா. ரூமி இஸ்லாமியர், யூதர், கிறித்துவர் ஆகிய மூன்று மத இனத்தவர் மீதும் சமமான மதிப்பைக் கொண்டவர். பாரசீகக் கவிஞர் ரூமி உலகிலே மிகப்பெரும் ” ஸூபி மாயப் புதிர் கவிஞராக” (Sufi Mystic Poet) மதிக்கப் படுகிறார். ரூமியின் கருத்து : “கடவுளைத் தவிர வேறோர் கடவுள் இல்லை. கடவுள் என்பவர் ஒருவரே.”

++++++++++++++++

ரூமியின் கவிதைகள்

என்னைத் தவிர நீ வேறு
எல்லோருடனும் இருப்பாயானால்
எவரோடும் நீ இருக்க வில்லை !
என்னைத் தவிர நீ வேறு
எல்லோரிடம் இல்லா விட்டால்
ஒவ்வொருவர் உடனும் நீ இருக்கிறாய் !
ஒவ்வொரு வருக்கும் உரிமையாய்
இருப்பதற்குப் பதிலாக
எல்லாரும் போல் இருப்பாய் !
பலரைப் போல் நீ இருந்தால்
நீ எவனு மில்லை !
பூஜியம் !

ஜெலாலுதீன் ரூமி.

++++++++++++

தடம் காண முடியாச் சுவடு
கவிதை -1

நான் கிறித்துவன் அல்லன்
நான் யூதனோ, இஸ்லாமோ அல்லன்
இந்து, புத்தம், சுஃபி அல்லது
ஸென் போன்ற
எந்த மதத்தையும் சாராதவன் !
++++++++++++
எந்தக் கலாச்சார கட்டமைப்பும்
எனக்கில்லை !
கிழக்கி லிருந்தோ, மேற்கி லிருந்தோ
உதித்தவன் அல்லன் !
கடலி லிருந்தோ அல்லது
கடல் மேலிருந்தோ வரவில்லை !
++++++++++++
மண்தளத்தி லிருந்து
இயற்கைக்குப் புறம்பான
புனிதனாகப்
பிரபஞ்சத் தனிமங்கள் கலப்பின்றிப்
பிறக்க வில்லை நான் !
++++++++++++
இவ்வுலகு அல்லது
அவ்வுலகின்
தனித்துவ வடிவ மில்லை.
ஆதாம், ஈவாளின்
சந்ததியோ அன்றி
வேறொன்றி லிருந்தோ நான்
அவதரிக்க வில்லை.
+++++++++++++
என் பூர்வீகக் கதை :
எனது நாடு எந்த நாடு மில்லை !
உடம்புக்கோ
என் ஆத்மா வுக்கோ
தடம் காண முடியாத
ஒரு சுவடு நான் !
++++++++++++
நேச இனத்தைச் சார்ந்தவன் !
இரு உலகங்களை
ஒருங்கே கண்டவன் நான் !
அழைத்திட
ஒரே குரல் தான் !
அறிவது முதலோ, முடிவோ,
அகமோ, புறமோ
மூச்சு விடுகின்ற
அனைத்தும்
மனித இனத்தின்
சுவாசிப்பு தான் !
***************************
தகவல் :
1. Holy Fire – Nine Visionary Poets & the Quest of Enlightment Edited By : Daniel Halpern (1994)
Jelaluddin Rumi’s Poem Translated By : Robert Bly.
2. The Essential Rumi – Tranlation By : Coleman Marks with John Moyne, A.J. Arberry & Rennold Nicholson (1996)
3. Life of Rumi in Wikipedia
+++++++
On-line texts and translations of Rumi
“MA-AARIF-E-MATHNAVI A commentary of the Mathnavi of Maulana Jalaluddin Rumi (R.A.)”, by Hazrat Maulana Hakim Muhammad Akhtar Saheb (D.B.), 1997 .
Four new translations of Rumi poems by Coleman Barks
Rumi poetry set to beautiful Persian Music on Mp3 and CD
The Masnavi I Ma’navi , by Maulana Jalalu-‘d-din Muhammad Rumi, Abridged and Translated by E.H. Whinfield on sacred-texts.com
Dar al Masnavi , several English versions of selections by different translators.
(Rumi.net) Rumi’s little-known biography and poems (Quatrains and Odes) in English by Shahram Shiva
Quatrains at Iranian.com
On Rumi
The Foundation of Universal Lovers of Mevlana Jelaluddin Rumi (EMAV)
The Rubaiyat of Rumi Lecture of Khosro Naghed .
Rumi, Poet of Love and Justice , CHN News
Jalaluddin Rumi
About Rumi, English translations and personal/rare biography
Several Rumi Poems (Quatrains and Odes) in English
Iranian studies site
The Threshold Society and Mevlevi Order
The Mevlevi Order of America . [This organization and the one above are unaffiliated with each other]
Official website of the Family of Jalal al-Din Muhammad Rumi
Mevlana
Mawlana Jalal al-Din Rumi- Mevlevi webpage
RumiOnFire.com – A Tribute to Rumi
What goes round… – The Guardian , November 5, 2000
Rumi Lectures at Harvard University
Rumi and the Tradition of Sufi Poetry
Mewlana Jelal Ad-Din Rumi
Treasures of Persian Literature , by Professor Behrouz Homayoun Far
Guernica Magazine (guernicamag.com) on the 800th anniversary of Rumi’s birth
Sermon on Rumi by UU Minister John Young
Can Rumi Save Us Now?

********************

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *