கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்
கட்டை விரல் சைஸுக்கு ஆன்மா இருப்பதாய் ஐதீகம்(அங்குஷ்டாப்யாம்)
அந்த ஆன்மன் கிருஷ்ண ஆண்மன்….
அங்குஷ்டாப்யாம்
———————-
வீணாய் இலைகளும் வேர்களும் இல்லாது
தானாய் முளைக்கும் மரமிவன் -நானார் ?
உரலில் தலைவிட்டு ஓவென்(று) அழுதால்
விரலளவு ஆகும் வியப்பு….கிரேசி மோகன்….
பகவான் ஸ்ரீ அரவிந்தர் சொல்வார்….
‘’An Eternal Child Plaqying An Eternal game
In an Eternal Garden”…..
அந்தக் குழந்தைதான் கிருஷ்ணன்….
அவனது GAME தீராத விளையாட்டு….
அவன் ஆடும் GARDEN பிருந்தாவன் -கார்டன்….
‘’சிந்தையில் சிக்காத சச்சிதா னந்தமே,
எந்தையே ஏகப் பரம்பொருளே, -விந்தையே!
தீராத ஆட்டத்தை, மாறாத தோட்டத்தில்,
சீராக ஆடிடும் சேய்’’….கிரேசி மோகன்….