மீண்டும் மீண்டும்
கேமராவைப் பாருங்கள்
என்று போட்டோகிராபர்
கூறிக் கொண்டிருக்க
நான்
ஜன்னலில் ஆடிய
அவளது நிழலைப்
பார்த்துக் கொண்டிருந்தேன்.
போட்டோ பிரிண்ட்
பார்த்தவர்கள் பார்வை
ஜன்னலை நோக்கித் திரும்பியது
சுவாதினமில்லாமல்
தூத்துக்குடி மாவட்டம் உடன்குடிக்கு அருகில் இருக்கும் மெய்ஞானபுரம் என்ற சிற்றூரில் பிறந்தவர் கனவு திறவோன். தனது பள்ளிப்படிப்பை மெய்ஞானபுரம் அம்புரோஸ் மேல்நிலைப்பள்ளியில் முடித்துவிட்டு, இளநிலை அறிவியல் படிப்பை நாசரேத் மர்காசிஸ் கல்லூரியிலும், முதுநிலைப் படிப்பை மதுரை காமராஜர் பல்கலைக் கழகத்துக்குட்பட்ட அமெரிக்கன் கல்லூரியிலும் மேற்கொண்டவர். வேதியியலில் ஆராய்ச்சிப் படிப்பை (Ph.D.) கான்பூர் இந்தியத் தொழில்நுட்பக் கழகத்தில் முடித்தவர். நூற்றுக்கு மேல் ஆராய்ச்சிக் கட்டுரைகள் எழுதியுள்ளார். தற்போது வேதியியல் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார்.
கவிதைகள், சிறுகதைகள், கட்டுரைகள் எழுதுவதைப் பொழுதுபோக்காகச் செய்து வருபவர்.