சுலோசனா

இல்லறம் எனும் நல்லறம்

இந்து தருமம் கூறும் நான்கு நெறிகளில் முதலான நூல் பிரம்மச்சரியம் என்பது பாலகனாக இருந்து வாலிபப்பருவத்தின் நுனழவாயிலில் முதல் படியில் மட்டும் அன்றி ,மகான்களால் வகுத்துக் கூறப்பட்ட அறநெறி நூல்கள் முதலான பலகலைகளையும் ஆழ்ந்து கற்க முற்படும் முன்னேற்றமான காலம்.சாண்றோர்களால் சாண்றோன் என அழைக்கும்படி வாழ்வது.,என்பது எவ்வாறு என்றும் அறிகின்ற பொற்காலம்.அறிந்த அறிவை தரும நெறிகளை அவரவர் குணநலன்களுக்கு ஏற்ப வாழ்வில் வாழ்ந்து பார்க்கும் காலம்.நாயன்மார்கள் வரலாற்றில் சுந்தரர் இரண்டு திருமணம் புரிந்து வாழ்கின்றார். ஊழ்வினையின் பயனாக அந்த காலகட்டத்தில் அது முற்போக்குத் திருமணம்.சங்கிலி நாச்சியார்- பரவை நாச்சியார் என இருவர். ஒருவர் கோவில் தாளா குலத்தை சார்ந்தவர். இன்னொருவர் கணவனை இழந்தவர் .இந்த சீர் திருத்த மனம் புரிந்தவர் திருநீலக்கண்டரின் வாழ்வும் அறிந்து கொள்ளத்தக்கதே.கணவரின் நடத்தை பிடிக்காத அவரின் துணைவியார் எம்மை தீண்டாதீர் என ஆணை இட இருவரும் முதிய நிலை வரை விலகியே இல்லறம் தொடர்ந்தனர்.ஒரு சோதனைக்கு பின்பு இறைவன் மீண்டும் இளமை அருளினார்.இல்லறம் எனும் நல்லறத்தை நடத்த முற்படும் காலம் என இந்து தர்மம் கூறுகிறது.இல்லறம் எனும் இனிய மலர்வனத்தில் அழகை தங்களின் தூய்மையான அழகான வாழும் முறையினால் இன்னும் கூட அழகூட்டவும் செய்யும் அற்புத காலம் .ஒரு சன்யாசி இவ்வாறு கூறுகின்றார்.எந்த நிலையும் உயர்வே .சன்யாசமே உயர்ந்த நிலை .மற்றவை அதைவிட குறைவு.என என்னம் கூடாது. இல்லற நெறி என்பது முறப்படி சரியாக கடைபிடிக்கப்பட்டால் அதில் எவ்வளவு கடமைகள் தெரியுமா?ம்ற்ற மூன்று நிலையில் உள்ளவர்களுக்கும் வேண்டுவன செய்ய கடமைபட்டவன் இல்லறத்தவனே ஆவான்.

பாரினில்-பாரதம்2

மனித இனம் என்பதே ஆண் பெண் எனும் பிரிவு சார்ந்ததே . எனினும் இரண்டு இனமும் சேர்ந்து வாழ்தலே வாழ்க்கை என்பது. விதிவிலக்காக தனியே வாழ்பவர்களும் உள்ளனர். அவர்கள் தனக்குத்தானே நிறை வேற்றும் வகையில் மனப்பக்குவம் வாய்ந்தவர்கள்.ஆணோடு நல்லமுறையில் சேர்ந்து பெண்ணும் பெண்ணோடு நல்ல முறையில் இணைந்து வாழும் பொழுதே ஆணும் பரஸ்பரம் நிறைவேற்றுகின்றனர்.என இந்து தர்மம் கூறுகின்றது. சந்தர்ப்ப சூழ்நிலையால் மணம் என்ற பந்தத்தில்,திருமண வாழ்வில் ஈடுபட இயலாதவர்கள் எத்தனைப்பேர்?அவர்களில் பலருக்கு மனதில் எதையோ இழந்தது போன்ற ஆதங்கம் இருக்கின்றது.இப்படி இருப்பது இயல்புதான் என்கின்றனர்.மன நல நிபுணர்கள்.பெற்றோரின் அன்பும் கரிசனமும் அரவணைப்பும் குறிப்பிட்ட வயது வரைக்கும்தான்.குறிப்பிட்ட ஒரு பருவத்தில் ஆணுக்குப் பெண்ணின் அனுசரிப்பும் பெண்ணுக்கு ஆணின் அனுசரிப்பும் தேவையாக இருக்கின்றது.இயற்கைக்கு இது இயல்புதான். இந்த தேவைகளும் உணர்வுகளும் என்கின்றனர்.அப்படி இன்றி இயற்கைக்கு எதிராக தனித்து வாழும் பொழுது சில சமயம் ஒழுக்ககேடான நிகழ்வுகள் சமூக நலனுக்கு கேடு விளைவிக்கின்றனர் என்கின்றனர் வாழ்வியல் நிபுணர்கள்.மனம் புரிந்தும் மனம் பொருந்தாது பிரிவதும் அல்லது சகித்துக்கொண்டு மனமின்றி வாழ்பவர்கள் எவ்வளவோ பேர்கள் துறவிக்கான பக்குவம் இல்லாதவர்களுக்கு திருமணம் தேவை. இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும்

நல்லாற்றின் நின்ற துணை, என வள்ளுவம் கூறுகின்றது. இந்து சமயம் மனித வாழ்வை நான்கு பகுதிகளாகப் பிரிக்கின்றது. முறையே பிரம்மச்சரியம் இல்லறம், வானப்ரஸ்தம் சந்யாஸம் என்று . இதில் இல்லறநெறி யில் இருப்பவர்கள் மற்ற மூன்று தர்மத்தில் இருப்பவர்க்கு உதவ கடமைப்பட்டவர்கள்.என்பதை திருவள்ளுவம் கூறுகின்றது.பிறப்பில் இருந்தே உலக மாயையில் இழுபடாமல் துறவு நெறியை பின்பற்றுபவர்கள் எங்கோ ஒரிருவர் தானே . மற்றபடி கல்விக்கற்று நியாயமான வழியில் பொருள் ஈட்டி ஈட்டிய பொருளை வீட்டிற்கும் நாட்டிற்கும் உதவுமாறு செலவுசெய்து வாழ்வதே இல்வாழ்வர்கள் கடன் வீட்டிற்கும் நாட்டிற்கும்கடமை.,முடிந்து பின் நான் யார் எனும் ஆன்மத்தேடலில் ஈடுபட்டு ஞானம் பெறும் மார்க்கத்தில் செல்வது வானப்ரஸ்தம் எனப்படுகிறது. அற்றது பற்றெனில் உற்றது வீடு.,எனும் நிலையை அடைவதே பாரத தாயினுடைய புதல்வனின் குறிக்கோள். ஐம்புலன்களுக்கும்சுகமளிக்கும் விதத்தில் படைக்கப் பெற்றிருக்கும் இவ்வுலக சுகங்களை தக்க துனையான மனையாளோடு மகிழ்ந்து வாழவேண்டும்.(எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி இருந்தது இந் நாடே _பாரதியார்) அனுபவித்து வாழ்ந்து நன் மக்கட் பேற்றை அடைவது

“ஈன்று புறந்தறுதல் தாயின் கடனே அவனை
சான்றோர் ஆக்குதல் தந்தையின் கடனே”

என்பதே பழந்தமிழர் கோட்பாடு . பாரதம் முழுதும் அனேகமாக அதுவேதான் கோட்பாடு எனலாம். ஆனால் இன்றைய பாரதத்தில் சான்றோனாக்குதலிலும் தாயின் பங்கு சமமாகவே இருக்கிறது..எட்டும் அறிவினில் ஆணுக்கிங்கே பெண் இளைப்பில்லை .இந்து சமயம் கூறும் மகத்தான விஷயங்களின் இல்லறனெறி யும் ஒன்று.நான்கு நிலைகளும் மனிதனை படிப்படியாக முன்னேற்றுகின்றது.ஆனால் மஹாபாரதத்தில் வரும் யயாதி போன்றவர்களும் உண்டு.யயாதிக்கு ஒரு சாபத்தின் காரணமாக விரைவிலேயே மூப்பு வந்து அனுபவிக்க ஆசைகளின் வேகம் அடங்கி அமைதியுராமல் எரியும் தீயில் எண்ணெய் வார்த்தார்ப்போல் ஆசைகளின் அனுபவ சுகத்தின் தாகம் இன்னும் அதிகமாயிற்று.யயாதிக்கு உடம்பின் மூப்பு அதிகமாகியும் மனதின் இளமையின் உணர்வுகள் அப்படி இருந்தன.தன்மேல் அனுதாபம் உற்ற தன் இளைய மகனின் இளமையைதான் வாங்கிக்கொண்டு தன் முதுமையின் துன்பங்களை மகனுக்கு அளித்தவர் யயாதி.எவ்வளவுதான் இன்பங்களை அனுபவித்தும் தனக்கு திகட்டவில்லை.என்பதை யும் அதே நேரம் தன் இளவயது மனதுடன் தந்தைக்காக அவரது முதிர்ந்த முதுமையை ஏற்றுக்கொண்டு அதன் இயல்பான வேதனைகளை சகித்துக்கொண்டு வாழும்ன் அன்பு மகனைக் கண்டு வேதனையும் மனம் மாறுதல் அடைந்த யயாதி தன்முதுமையை திருப்பிக் கொடுக்கின்றான்.தவம் புரிந்து நலம் எய்து வனத்தை நோக்கி செல்கிறான்.என்கிறது மஹாபாரதம்.எந்த நிலையிலும் மனித மனத்திற்கு போதும் என்ற நிறையுணர்வே அவனை அடுத்த மேல் நிலைக்கு எடுத்துச் செல்லும். என்பதைபிரம்மச்சரியம் இல்லறம் _வானப்பிரஸ்தம் .சந்யாஸம் என்ற வரிசை அருமையாக அன்பாக கூறுகின்றது.

இந்திய திருமணங்களின் நோக்கமும் மிக உயர்ந்தது. ஆனால் அது அந்தக் கால கட்டத்தில் எவ்வாறெல்லாம் மறக்கப்பட்டது. அல்லது மறுக்கப்பட்டது என்பதே சிந்தனைக்கு உரியது. அரசர்கள் நிலையில் அரசாங்க விஷயங்களின் பொருட்டு திருமணம். இராஜியங்கள் விஸ்தரிக்க திருமணம். பகை முடிக்கத் திருமணம்.இன்னும் பற்பல காரணங்கள் திருமணத்திற்கு சுயம்வரம் என்பது ஒருவகை.பல நாட்டின் அரசகுமாரர்களை அழைத்து அவர்களைப் பற்றிய விஷயங்களை அரச குமாரிக்கு அதாவது மணமகளுக்கு எடுத்துச் சொல்வார்கள்.அவற்றை எல்லாம்கேட்டுக் கொண்ட அரசகுலத்தை சார்ந்த மண்மகள் தனக்கு விருப்பமான மணமகன் தேர்ந்து எடுத்து மாலை சூட்டுவாள் சில நேரம் அங்கு வந்த மற்ற அரச்ர்கள் வெற்றி அடைந்தவனை போருக்கு அழைப்பதும் உண்டு. அவரை வென்ற பிறகே இருவருக்கும் திருமணம் .இம்மாதிரி திருமணமண்டபத்தில் தான் ப்ருதிவிராஜன் சம்யுக்தையை சிறை எடுத்தான்.ஆனால் அந்த செயல் மணமகளின் சம்மதத்துடன் நடந்தது.சில இடங்களில்மனமகளின் சம்மதத்துடன் நடந்தது.சில இடங்களில் மணமகளின் ஒவியத்தை அனுப்புவார்கள். நாடு நாடாக கொண்டு செல்லும் பொழுது விருப்பப்பட்ட அரசகுமாரி படத்திற்கு மாலையிடுவாள்.சில இடங்களில் அரசனின் வாளை கொண்டு செல்வார்கள்.வாளுக்கு உரிய வீரனை மணக்க விரும்பும் பட்சத்தில் அவனால் அனுப்பப்பட்ட வாளினுக்கு மாலை சூட்டினாலே திருமணம் முடிந்த மாதிரிதான்.அந்நாட்களில் வீரத்திற்கே முதலிடம் தரப்பட்டது .இல்லாள் அகத்திருக்க இல்லாததொன்றில்லை.என்பது வள்ளுவர் வாக்கு. இதனை இயற்றிய வள்ளுவர் பெருந்தகை வாசுகி எனும் மங்கை நல்லாளுக்கு மனமுவந்த மணவாழ்வு நடத்தினார் என செவி வழி செய்தியாக பல கதைகள்ருக்கின்றன.அவர் முழுமையான பேணும் உணர்வு கொண்ட பெண்ணையே முன்னிறுத்தி வாழ்க்கைத்துனை நலம் எனும் ஒரு முகவை இயற்றியிருக்கின்றார்.தன்னையும் பாதுகாத்துக்கொண்டு தன்னை மணந்து கொண்டவனையும் பேணி காப்பாற்றி தகை சான்ற சொற்களையும் காப்பாற்றி இத்தனை கடமைகளையும் ஆற்றியும் புத்துணர்வு கொண்டவளாக திகழும் சக்தி படைத்தவள் பெண் என தெய்வப்புலவர் நினக்கின்றார் போலும்.இயற்கையே பெண்படைப்பை தகமைவாய்ந்ததாக கருதியதால்தான் மக்கட்பேறை அவள் வசம் ஒப்படைத்திருக்கின்றதோ என்னவோ? தமிழகத்தில் சங்கக் காலத்திலேயே காதல் திருமணங்கள் பழக்கத்தில் இருந்தது என தெரியவருகிறது.திருமணத்திற்கு முந்தய காதல் புரிந்த காலம் களவியல் எனவும் திருமணத்திற்கு பிறகு கற்பியல் எனவும் அழைக்கப்படுகிறது.காதல் புரிந்த காலத்திலே தலைவி தலைவனோடு தனிவழி சென்றிட கூடவே தோழியும் சென்றிடுவாள்.தலைவியை வளர்த்த செவிலித்தாயோ தோழியோ திரும்ப அழைத்து வந்து பெற்றோரிடம் சொல்லி திருமணம் முடித்து வைப்பர்.ஒருவனுக்கு ஒருத்தி என்ற பண்பாடே பெரும்பாலும் தமிழகத்தில் நடைமுறையில் இருந்துவந்தது. ஆனால் வள்ளுவப் பெருமானே பொருளின் பால் பிரிவு பரத்தையர் பால் பிரிவு என பிரிவை வகைப்படுத்துகின்றனர்.மனைவியை விட்டு கணவன் காசுக்காக கணவனைவிரிக்கும் மங்கையர்பால் செல்வது எவ்வளவு இயல்பான ஒன்றாக இருந்திருக்கிறது.கற்புனிலை என்பதை வீரமும் ஈகையுமேப் பெண்களைக் கவரும் ஆற்றல் உள்ள விஷயங்களாக கருதப்பட்டது.புலியை அடக்கி அதன் பல்லை கொண்டு வந்து தாலியாக கட்டுவதும்.மணமகள் வளர்க்கும் காளை மாட்டை அடக்கி அவளை மணப்பதும் பழகத்தில் இருந்திருக்கிறது.(வீரனோடு வீரன் போரிடாமல் மிருகங்களோடு ஆறு அறிவு உள்ள மனிதன் ஏன் போர்புரிந்து அடக்கினான் எனத் தெரியவில்லை.

நளாயினி எனும் ரிஷிபத்தினி தன் கணவர் அவர் ஆசை பட்ட பெண்ணின் வீட்டிற்கு கூடையில் வைத்துத் தலையில் சுமந்து சென்றாள் என்பது புராணக்கதை. அவள் சூரியனையே ஒரு நாள் உதிக்காதவாறு தடுத்து நிறுத்தும் வாக்கு பலம் உள்ளவளாக சித்தரிக்கப்படுகிறார். வள்ளுவரின் தெய்வத் தொழா(அல்)கொழுநன் தொழுதெழுவாள்,பெய்யெனப் பெய்யும் மழை.தன்னைப் படைத்த தெய்வத்தையே இரண்டாம் இடத்திலும் ,தன் கணவனாக மணந்தவனை முதல் இடத்திலும் வைத்துப்பார்ப்பவள் நல்ல மனைவி என்றும் அவள் பெய்யென பெய்யும் மழை என்று அவள் சொல்வாக்கு குறித்து கூறுகிறார் வள்ளுவர்.பெண்ணை எவ்வளவு உயர்த்த முடியுமோ அவ்வளவு உயர்த்தி வைத்து புகழ்கின்றார்.

இன்னும்கூட சில கதைகள் உண்டு `தவ வலிமையில் ஒரு கொக்கை எரித்து விட்ட ஒரு முனிவர் பிட்சை வேண்டி ஒரு இல்லத்தின் முன் நிற்கின்றார். சற்றே தாமதித்து வந்த இல்லத்தரசியைக் கண்டு கோபத்துடன் கடுமையான நோக்குடன் நோக்க அந்த மனைக்குரியவள் கொக்கென்று நினனைத்தாயோ கொங்கணவா” என வினவ முனிவர் அதிர்ச்சி அடைகின்றார்.வனத்தில் தவம் செய்து முனிவர் பெற்ற சக்தியை இல்லத்தில் தனக்குறிய கடமைகளை சகிப்புத்தன்மையுடன் செவ்வனே செய்யும் இல்லாலும்பெறுகிறாள் என்பது நாம் புரிந்துக் கொள்ளவேண்டிய ஒன்றாக உள்ளது. ஆனால் பெண்னின் விருப்பம் எனன?ஆணைக் குறித்தே அனைத்து விருப்பங்களும் கூறப்படுகின்றன.அதற்கு அவனுக்கு வசதியாக சகித்துக் கொண்டு பொறுமையுடன் விட்டுக் கொடுத்து வாழ்கிறாள்.பார்வைக்குப் புலப்படாமல்வனங்களுக்கும் மலைகளின் இடையே சலசலத்து ஒடி நதிபோன்றது தூய இல்லறம் .ஒருவர் பால் ஒருவர் மதிப்பும் மரியாதையும் கொண்டு இவரோடு சேர்ந்து வாழ்வேண்டும் என்பதற்காக அவளும் அவரும் அன்புக்கொண்டு மனதிற்காக நடக்கும் அரிய மணங்களின் ஒன்றாக திருமணங்கள் நிகழ்ந்ததாக ரிஷிகள் ரிஷிபத்தினிகள் என அழைக்கப்படும் இவர்கள் வனத்தில் நதிக்கரையில் ஆஸ்ரமம் அமைத்து அதில் வாழ்ந்தனர். காயும் கனியும் உண்ணும் உணவு.

மலர்களே மனம் கவரும் அணிகலன்கள, மக்கட் பேறு வேண்டினால் மட்டுமே அதற்குறிய வாழ்வு.மற்ற காலங்களில் எல்லாம் இறையை தொழுவதும் இலக்கிய பணியுமே. அற நூல்களை அறியாப்பிள்ளைகளுக்கும் புகட்டுவதுமே ஆகும்.அங்கு ஆடம்பர மாளிகைகள் இல்லை .படோடபமான ஆடை ஆபரணங்கள் இல்லை. சமாதானமும் அமைதியும் ஆட்சி புரிந்தன. புலியும் மானும் ஒர் துறையில் நீர் அருந்தி தாகம் தீர்த்தன.இங்கேயே பற்பல அரசரின் அன்பை அடைந்த ஜயதேவர் அரண்மனை வாசம் கிட்டியும் தன் மனைவி பத்மாவதி ஆஸ்ரம வாசத்தையே விரும்பி சென்றுவிட ,ஜயதேவர் அரண்மனையைத் துறந்து அன்பு மனைவியுடன் தங்களுக்கு இயல்பான ஆஸ்ரம வாசத்தையே தொடர்ந்தனர்.ஜயதேவர் பத்மாவதி போன்ற தெய்வீக தம்பதிகளின் படைப்பினை கீதகோவிந்தம் எனும் அஷ்டபதி ச்ருங்காரகாவியமாக மலர்ந்து மணம் வீசுகிறது.ஆசாரியார்களின் மகா இலக்கியங்களுக்கு உரை எழுதுதல் போன்ற இலக்கிய பணிகள் இனிது நடைபெறும்..தங்கள் வாழ்நாள் முழுதும் இது போன்ற பணிக்கே அர்ப்பணித்த ரிஷிகளும் ரிஷிபத்தினிகளும் உண்டு.பரசுராமனின் தந்தை ஜமதக்கனி முனிவர் ,தமது பத்தினி வாளில்சென்ற கந்தர்வனின் அழகை வியந்து ரசித்தாள்.தான் ஈடுபட்டிருந்த பணியில் கவனம் குறைந்தாள்.அதனால் அந்த பணிகுறைவு பட்டது என்பதற்காக தன் மகன் மூலமே மனைவியை கடுமையாக கண்டித்தார் என்றும் அறிகிறோம். கெளதம முனிவர் தன் பத்தினி அகல்யாவோட வாழும் காலத்தில் இந்திரன் அகல்யை மீதுகொண்ட மையலால் கெளதம முனிவரின் உருவில்வந்து ஏமாற்றுகிறான்.ஏமாந்த அகல்யாவை முனிவர் சினத்துடன் சபிக்கின்றார்.வந்தது யார் ?தன் பதியா அந்நியனா என அறியும் உள்ளுணர்வு இல்லாத நீ கல்லாக கடவாய் என்று சபித்தார்.

ஸ்ரீராமனின் பாதம் பட்டு ஜடமாகக் கிடந்த அகலிகை மீண்டும் பெண் ஆனாள்.அவளின் தண்டனைக்காலம் முடிந்ததும் முனிவரும் அவளை ஏற்கின்றார்.அரச குமாரிகள் கூட முனிவரை மணந்தனர் அகத்திய முனிவரின் பத்தினி லோப முத்ரா அரச குமாரி ஆவார் .அத்திரி மகரிஷி அனுசூயா தேவி வசிஷ்டர் அருந்ததி போன்ற ரிஷிகள் தார்மீக இல்லறம் அமைதியான வாழ்விற்கு எடுத்துக்காட்டல்லவா? தான் ஏற்றுக் கொண்ட இலக்கியப் பணி முடிந்த அன்று முனிவர் இவ்வுலக நினைவில் இருக்கும் பொழுது ,ஒரு முதிய மாது தனக்குப் பணிவிடைகள் செய்வதப் பார்த்தார். தான் எழுதிய ஏடுகளை பாதுகாத்து எடுத்து வைக்கும் அவளைக் கண்டு வியப்புற்றவராக ,நீங்கள் யாரம்மா என வினவுகின்றார்.அவளோ மெளனமாகவே நின்றாள். மறுபடியும்முனிவர் வினவ அந்த அம்மையார் சுவாமி நான் உங்கள் பத்தினி ஆவேன் என்கின்றார்.வியப்பும் அதிர்ச்சியும் உற்ற முனிவர் நினைத்துப் பார்த்தார். தாம் பல ஆண்டுகளுக்கு முன்னால் மணந்துக் கொண்ட இளம் மனைவியே இவளாவாள்.தாம் புத்தகத்திற்கு உரை எழுத ஆரம்ப காலத்தில் அவள் இருந்த இளமைத் தோற்றம் நினைவில் வந்து நின்றது.தாம் தம் பணியில் ஆழ்ந்து ஈடுபட்டு விட்டதில் ஆண்டுகள் உருண்டோடி இளமை கழிந்துவிட்டது. தமக்குத் தொண்டாற்றி தம் பணிக்கு பெறும் உதவியாக இருந்த சகதர்மினியை மிக்க அன்புடனும் நன்றியுடனும் நோக்கினார்.தாம் எழுதிய உரைக்கும் பாமதி எனும் தன் பத்தினியின் பெயரையே சூட்டினார்.பாரதத்தின் மிகப் பெரிய செல்வமான ஆன்ம ஞானம் என்பது,அதை அடைவதே இந்த பதி பத்தினிகளின் முக்கிய நோக்கமாக இருந்தது .இத்தகைய ஒரு இல்லறம் உலகின் வேறு எந்த நாடுகளிலும் இருந்ததா என்பது ஐயத்திற்கு உரியதே ஜனக மன்னரின் சபையில் யாக்ஞ வல்கியர் என்ற முனிவர் சபையில் முதன்மை ஸ்தானத்தில் இருந்தார்.பெரும் ஞானி ராஜரிஷி ஆனதால் ரிஷிகளின் செல்வமான ஆநிரைகள் (பசுக் கூட்டங்கள்) முதலிய செல்வங்கள் அவரிடம் மிகுந்திருந்தது. அவருக்கு துனைவியர் இருவர்.அவரின் இரண்டாவது துனைவியர் மைத்ரேயி என்பவர்.அவர் முனிவருக்கு மனவியாக மட்டும் அன்றி சிஷ்யையாகவும் அமைந்திருந்தார். ஒரு கால் கட்டத்தில் யாக்ஞ வல்கியர் மனம் திரல் குறையை உணர்ந்தார்.அவர் மனம் இருந்த நிலையில் இருந்து இன்னும் உள்ளுக்குள் நான் யார் எனும் ஆன்ம விசாரித்திற்காக அவா உற்றது.ஞான விசாரத்திற்கு தனிமைத் தவமே உற்ற வழி என தீர்மானித்தவராய் அரசபையில் இருந்து பிரிந்து வந்து தன்னிடம் உள்ள செல்வங்களை பத்தினிகளுக்கும் குமாரர்களுக்கும் வழங்கினார்.இரண்டாவது துனைவி மைத்ரேயின் மனம் ஒப்பவில்லை.தன் பதியிடம் கேட்கிறார் .இவைகளை எங்களுக்கு அளித்துவிட்டு தாங்கள் எந்த செல்வத்தை நாடி செல்கின்றீர்கள். என வினவுகின்றாள்.தன் மன நினைவையும் தன் தனிமைத் தவத்தின் அவாவினையும் ரிஷி விளக்கமாக எடுத்துரைக்கின்றார். ஆன்ம ஞானவிழைவு மைத்ரேயிக்கு மிக அதிகமாக இருந்ததால் பதியிடம் இவ்வாறு கூறுகின்றார்.ச்வாமி தாங்கள் எந்த உயரிய செல்வத்தை நாடி செல்கின்றீர்களோ அதை அடையவேஉன் மனமும் விழைகின்றது.அதை நாடியே நானும் தங்களை பின் தொடர்ந்து வருகின்றேன்.

இந்த வார்த்தைகளைக் கேட்டு ரிஷி மிகவும் மனம் மகிழ்ந்து பிரியே அவ்வாறே ஆகட்டும் என்றாராம். பிருகதாரண்ய உப நிஷத்தில் இந்த பகுதி வருகிறது.பகவான் ஸ்ரீராம கிருஷ்ணர் மிகவும் பரந்து விரிந்த மனதை உடையவர் பிறவி ஞானி எப்பொழுதுமே மிக உயரிய நிலையில் நின்ற அவர் மனம் சர்வ சமய சமரச கோட்பாட்டைக் கொண்டது. அவர் இயல்பிலேயே சந்நியாசி. ஆனால் அவர் இல்லறத்தில் இருந்தவர்.மிகச் சிறிய வயதிலேயே ஸ்ரீசாரதா தேவியை அவருக்கு மனம் முடித்திருந்தனர்.ஆனால் அவர்கள் சராசரி சரீர சம்மதப்பட்ட இல்லறம் நடத்தவில்லை.அந்த தெய்வீக தம்பதிகள் இடையே நிகழ்ந்த ஒரு கேள்வி பதில் ஆன்மீக அளவில் சரித்திர புகழ் பெற்றது.சாரதா என் மனம் எப்பொழுதுமே அல்லும் பகலும்துறவிலேயே நிலைப்பெற்றதாக இருக்கின்றது.உனக்கு விருப்பமானால் அதை உதறியாக வேண்டும்.உனக்கு ,உனக்கே சொந்தமான குழந்தை வேண்டுமா?அல்லது ஆயிரக் கணக்கான பிள்ளைகளுக்கு அன்னையாக வேண்டுமா? உன் விருப்பத்தைச் சொல் ஸ்ரீ சாரதையோ மனம் நெகிழ்ந்தவாறு நான் உங்கள் நிலையில் இருந்து உங்களை கீழே இழுக்க ஒரு நாளும் வரவில்லை.அனைவருமே என் குழந்தைகளாக இருக்கட்டும்.எனும் பதில் சொல்லி தன் தெய்வீகத் தன்மையை நிலைநிறுத்தினார்.பரம ஹம்சரின் முதல் சிஷ்யையும் அன்னையரே ஆவார்.இது போன்ற ஞானத்தின் உச்சியில் நின்ற இல்லறத்தை இந்தியாவைத் தவிர எங்கு காண முடியும்.,என்ற சிந்தனயே தோற்றுவிக்கிறது.நல்லவர்கள் இருவர் _பொருத்தமானவர்கள் இருவர் வாழ்வில் இனையும் வாய்ப்பு ஏற்பட்டால் அவர்கள் ஏதோ ஒரு விதத்தில் எவ்வளவு உயர் நிலையை எட்டுகின்றனர்.அப்படிபட்ட தம்பதிகள் நாயன்மார்களிலும் உள்ளனர்.பாரதத்தில் உருவ வழிப்பாட்டு தத்துவத்தில் சிவ சக்தி ஐக்கியம் என்பது ஒரு பெரும் தத்துவம் அர்த்தநாரீஸ்வரர் வழிபாடும் ஆண் பெண் இணைப்பே உலக இயக்கம்.சராசரியாக வாழந்து பிளைக்குட்டிகளைப் பெற்றெடுத்து எதோ தங்களால் இயன்றவரை வாழ்ந்தோம் என்றில்லாமல் அதே வாழ்வை எவ்வளவு தெய்வீகமாக வாழ்ந்து இறைவனையே அடையலாம்.என பழங்கால நூல்கள் மட்டுமே அல்ல நவீன உலகின் ஞானியான ஓஷோ தன்னுடைய காமத்தில் இருந்து கடவுளுக்கு எனும் புத்தகத்தில் விளக்கி இருக்கின்றார்.

மனப் பக்குவம் வாய்ந்த மனித இனத்தை சேர்ந்த ஆண் பெண்கள் இருவரும் வாழ்வில் இனை சேரும் பொழுது யாரிடம் குணநலன்கள்மிகுதியாக உள்ளதோ .அவர் வழிக்கு மற்றவர் சென்று இனைந்து விட்டால் இனிய இல்லறம் .ஆண் அவ்வாறு இருக்கும் பொழுது பெரும்பான்மையாக பெண்கள் தான் என்பது இல்லாமல்இணைந்து விடுகிறார்கள்.அவ்வாறின்றி பெண் குணநலன்கள் மிக்கவளாக இருந்து விட்டால் ஆண் என்பவன் தான் என்பதாலேயே தாழ்வு மனப்பான்மையுற்று அவளுக்கு ஒத்துழைப்பு தராததோடு,அவளிடம் கடுமையாக நடந்துக் கொள்ளவும் கூட முற்படுகின்றனர் .இருவருமே சமம் என்ற மனப்பான்மை இருவருக்குமே வாய்த்து விட்டால் வாய்த்தது வாழ்வு என்கின்றனர் உள நல ஆராய்ச்சியாளர்கள்.

பரதம் பயில மிக விரும்பி கிட்டத்தட்ட 20 வயது வரை பரதம் கற்க வாய்ப்பேகிடைக்காமல் பிறகு மிகவும் சிரமப்பட்டு அனுமதி பெற்று அருண்டேல் என்ற ஆங்கிலேயரை மணந்து அவரின் ஒத்துழைப்போடு பரதம் பயின்றுதொடர்ந்து பாரதத்தின் சிறந்த நடன மணிகளில் ஒருவராக மிளிர்ந்தார்.அவரால் ஆரம்பிக்கப்பட்ட கலாஷேத்ரா எனும் பள்ளி அடையாரின் ஆலமரம் போல் தழைத்துஅருகு போல் வேரூன்றிபல கலைகளும் ப்யிலும்பண்பாட்டுக் கூட மாக செயல்பட்டு வருகிறது,தமிழ்செல்வி சாரதா நம்பி ஆருரான் அவர்கள் தமிழில் டாக்டர் பட்டம் பெற்றவர். இவர்கள் இருவருமே மறைமலைஅடிகார குடும்பத்தை சேர்ந்த தம்பதிகள் ஆவார்கள்.பொருத்தமாக அமைந்தவர்கள்.

புதுமைப் பெண்ணிவள் சொல்லும் செய்கையும்பொய்மை கொண்ட கலிங்கம் புதிது. என்ற பாரதியின் பொருள் பொதிந்த வார்த்தைகளுக்கு நடமாடும் விளக்கமாக வாழ்ந்து வருகின்றார்கள். சாஸ்தரங்களும் சம்பிரதாயங்களும் மிகுந்த பிராமண குலத்தில் பிறந்து பால்ய விவாகம் எனும் கொடுமைக்கும் ஆளாக்கப்பட்டும் விதிஅதோடு விடாமல் கைம்பெணெனும் வெறுமைக்கும் ஆளாக்கியது தாய் வீட்டிற்கே திரும்பிய அச்சிறுமியானவள் வறுமையின் காரணமாக வீட்டு வேலைக்குச் செல்லும் தன் தாயோடு சேர்ந்து அவளும் செல்ல த் துவங்கினாள்.அவர்கள் சென்றவீட்டிற்கு உரியவர் நாடகக் கம்பெணி நடத்தி வந்தார்.இந்த சிறுமியின் துறுதுருப்பான முகமும் புத்திசாலித்தனமான செயல்களும் அந்த நாடககம்பெணியின் முதலாளியினுடைய கலைக் கண்களுக்குவிருந்தளித்தன,அதே நேரம் அவள் ந்டிப்புத்துறையில் ஈடுபட சிறுமியின் தாயிடம் திறம்பட பேசி தன்னுடைய நாடகக் கம்பெணியில் நடிக்க அனுமதி வாங்கினார்.நடிப்பில் பிரவேசித்த சிறுமி திறமையை வெளிக்காட்டி புகழ் பெற்று திரை உலகிலும் நுழைந்து கதாநாயகியாக நடிக்கவும் வாய்ப்பு பெற்றார்.திரைஉலகில் வெற்றிகரமான கதா நாயகியாக இடம் பெற்று புகழ்பெற்ற அந்த நடிகை தானே தயாரிக்கவும் செய்தார். அந்த படமும் வெற்றி பெற்றது.அவரின் கலை வாழ்வோடு,இளம் விதவையான அந்த சிறுமியின் வாழ்விலும் மாறுதல் வந்தது .வாய்ப்பு கிடைத்தது. படிபடியாக முன்னேறினார். தான் ஈடுபட்ட திரைத்துறையில்பல விதங்களிலும் தன் திறமையை

காட்டி புகழ் பெற்றார். அது மட்டுமின்றி தன்னுடன் நடித்துக் கொண்டிருந்த வரையே மனந்து நல்லதொரு குடும்பத்தின் தலைவியும் ஆனார். அவர்தான் திரைதுறையில் முதன் முதலில் தயாரிப்பு தொழில் செய்த பெண் தயாரிப்பு நடிகை டி.பி. ராஜலஷ்மி ஆவார்.

தெய்வீக இசை என்பார்கள் .தன் குரலில் பலரையும் கவர்ந்தவர் இசைக் குயில் திருமதி எம்.எஸ்.சுப்பு லட்சுமி அவர்கள். திரைப்படத்திலும் நடித்த இவர், நடிகை என்ற பெயரைவிட பாடகி என்ற பெயரிலேயே உலக மக்களுக்கு அறிமுகம் ஆனார்.பல சிரமங்களைக்கடந்து கல்கி சதாசிவம் அவர்களை துணைவராக அடைந்து அவரின் துனையோடு புகழின் உச்சிக்குசென்றவர்.இசை நிகழ்ச்சியின் மூலம் பல ந்ல்ல காரியங்களுக்கு சேவை புரிந்தும் பல நிறுவணங்களுக்கு பொருள் உதவி அளித்தவர். ஒரு முரை இந்திய பிரதமர் நேரு இவரை நான் வெறும் மந்திரி நீ இசை உலக ராணி என பகழ்ந்து கொளரவித்தார்.செய்யும் தொழிலே தெய்வம் என்று உணர்ந்து அதில் திறமை எனும் செல்வத்தை மிகுதியாகவே பெற்றிருந்தார்.உலக புகழ் வாய்ந்த இவர் குரல் ஒலிக்காத விடுகளே இல்லை.இவரின் வெங்கடேசப்ரபாதமும் விஷ்னு சகஸ்சர நாமமும் ஒலிக்காத வீடுகளே இல்லை.பக்தமீரா என்ற படத்தில் மீராவாகவே வாழ்ந்தவர்.இவரின் குரல் கேட்பவரின் இதயத்தில் ஆன்மீகத்தேடலை உண்டாக்கியவர்.

அஷ்டாவதான என புகழ் பெற்ற டி.பானுமதியும் சொந்தக் குரலில் பாடி நடித்ததோடு அன்றி படம் தயாரிக்கவும் செய்தார். குதிரை ஏற்றமும் பயின்றவர்.திரை உலகில் ராணி போல் தான் நடந்துக் கொள்வாராம்.கே பி. எஸ். என்று அழைக்கப்பட்டு பெறும் புகழ் பெற்ற கே.பி.சுந்தராம்பாள் என்ற தெய்வீக இசைக்கலைஞர். இவரின் கணீர் என்ற குரல் காதுகளின் வழியே சென்று இதயத்தை தொடவல்லது.யாரோடும் துனை சேர்ந்து நடிக்காதவர் .அப்படி நடிப்பதை அடியோடு விரும்பாதவர் அவரின் சொற்களின் உச்சரிப்பும் கம்பீரமும் அவருக்கு மட்டுமே உரித்தானவை
மகா ஞானி ஓளவையாக நடிக்கும் பாக்யம் பெற்ற மாதரசி ஆவார்.

சிறு பெண்ணாக இரயிலில் பாடிக் கொண்டிருந்த இவரை குரலின் வளமையை கேட்டு ஏழ்மை நிலையில் இருந்து மீட்டார் .பிற்காலத்தில் இருவரும் தம்பதிகள் ஆனார்கள் என்று இவரின் வாழ்க்கை குறிப்பு கூறுகிறது.மக்களின் மனதில் ஒளவை என்றாலே இவரின் உருவம் தான் தோன்றும்.
அந்த அளவு அந்த பாத்திரமாகவே வாழ்ந்து காட்டியவர்.வறுமையின் காரணமாக ரயிலில் பாடி பிழைத்துக் கொண்டிருந்தவர் தன் உழைப்பினாலும் திறமையாலும் அக் காலத்தில் 50-60 வருடங்களுக்கு முன்பே ஊதியமாக லட்சம் வாங்கியவர்.

ஆந்திர தெலுங்கு நடிகை சிறுமி ஜானகி அவர்கள் சினிமா கதைகளில் வருவதைபோன்ற சம்பவங்களையே சொந்த வாழ்விலும் கண்டவர்.அவரே பல பேட்டிகளில் கூறியிருக்கிறார்.மிகச் சிறுவயதிலேயே கல்யாணம் செய்து வைக்கப்பட்டவர்.கணவரோ சிறிதும் பொறுப்பில்லாதவர். மூன்று குழந்தைகளுக்கு தாயாகி விட்ட ஜானகி அவர்கள் குழந்தைகலின் முன்னேற்றத்திற்காக நடிப்புல்கில் பிரவேசித்தவர்.ஒரு பேட்டியில் அவர் கூறியிருந்தார்.குழந்தைகளை நல்ல முறையில் வளர்த்து ஆளாக்கி விடுவதற்கே தன் வாழ்கையை தத்தம் செய்திருப்பவர்.தாயாகவே வாழ்ந்து வருகின்றார்.வாழ்வின் பல படிநிலைகளை தன் வாழ்வில் கண்ட திருமதி சௌகார் ஜானகி அவர்கள் . ஒன்றாகவே இருந்த ஒன்று இரண்டாகப் பிரிந்து ஆண் என்றும் பெண் என்றும் பெயர் கொண்டது.மனித குல வளர்ச்சிக்காகவே இந்த பிரிந்தது பின் இணையும் செயல்கள் எல்லாம் மனித குலத்தின் வளர்ச்சியின் பொருட்டு உலகில் நடந்து வருவதாக கூறப்படுகின்றது.ஆணும் பெண்ணும் தனித்தனியே வாழ்வதில் நிறைவு இல்லை என சமூக நலன் விரும்புகின்றனர்.

தட்டச்சு உதவி : உமா சண்முகம்

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *