எப்பொழுதும் நீ என்னை ஆதரி!
-மன்னை சரஸ்வதி ராசேந்திரன்
புள்ளி மயில் வாகனா
வள்ளி மனம் கொண்டவா
துள்ளி வரும் வேலுடன்
அள்ளித் தருவாய் அருளையே!
சந்த இசை ஷண்முகா
கந்த மலைக் கடம்பனே
வந்தெ னெக்குக் காட்சிதா
சந்தம் இசைத்துப் பாடறேன்
வள்ளிக் கணவா வடிவேலா
உள்ளங் கவர் அழகனே
தள்ளி நின்றது போதுமய்யா
அள்ளி அணைத்துக் காத்திடு
அப்பனுக்குப் பாடம் சொன்ன
சுப்பையா சாமிமலை முருகா
தப்பெதுவும் செய்யாமல் காத்திடு
எப்பொழுதும் என்னை நீஆதரி