கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்
”காசிக்குப் போனாலும், காலை விடாதபசு,
நேசிப்பைக் கண்டு நெகிழ்ந்ததால், -ஸ்வாசிப்பை,
வேடனம்பு கொண்டவுடன், வைகுண்டம் செல்கையில்
மாடணைந்து செல்கின்றான் மால்’’….கிரேசி மோகன்….
வேடன் அம்பு -ஜரா வேடன் அம்பு மாடு வருடும் அதே
பாதத்தில் பட்டு கிருஷ்ணாவதாரம் முடிகிறது….
பாதம் வருடும் பாதசாரி மாடு பார்த்தசாரதியோடு
பரமபதம் பயணிக்கிறது….சபாஷ் கேசவ்….