ஆடிவெள்ளி அம்மை கவிதை
-சரஸ்வதி ராசேந்திரன்
வருவாய் அன்னை அபிராமி
திருக்கட வூரின் அபிராமி
திருவருள் தந்து அருளிடு நீ
பட்டருக்கு நிலவைக் காட்டிடவே
தோட்டைக் கழற்றி எறிந்து நீ
பக்தரின் உயிரைக் காத்தாயே இந்த
பக்தையின் குரலுக்கும் செவிசாயி
பொய்கள் நிறைந்த உலகினிலே
மெய்கள் ஜெயித்திட அருளிடுநீ
சூது கள் சூழ்ச்சிகள் வஞ்சனைகள்
ஏதுமில்லா நல்மனதை தந்திடு நீ
தொழுதேன் நானே தினந்தோறும்
தோற்றம் நீ இன்னும் தரவில்லை
அம்மா உனைத்தான் அழைத்தேனே
சும்மா இருப்பதோ உன் நீதி ?
வருவாய் அன்னை அபிராமி
அருள்விழி காட்டி நலம்தருவாய்!