ஆடிவெள்ளி அம்மை கவிதை

0

-சரஸ்வதி ராசேந்திரன்

வருவாய்     அன்னை         அபிராமி                  
திருக்கட       வூரின்              அபிராமி                     Abirami
திருவருள்    தந்து                 அருளிடு நீ
பட்டருக்கு    நிலவைக்       காட்டிடவே
தோட்டைக்   கழற்றி            எறிந்து நீ
பக்தரின்          உயிரைக்       காத்தாயே  இந்த
பக்தையின்    குரலுக்கும்   செவிசாயி
பொய்கள்        நிறைந்த        உலகினிலே
மெய்கள்         ஜெயித்திட    அருளிடுநீ
சூது கள்           சூழ்ச்சிகள்      வஞ்சனைகள் 
ஏதுமில்லா     நல்மனதை    தந்திடு நீ
தொழுதேன்    நானே              தினந்தோறும்
தோற்றம்         நீ இன்னும்      தரவில்லை
அம்மா               உனைத்தான்  அழைத்தேனே
சும்மா                இருப்பதோ      உன் நீதி  ?
வருவாய்         அன்னை           அபிராமி
அருள்விழி       காட்டி                நலம்தருவாய்!

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *