-பா. ராஜசேகர்

கண்ணசைத்தாய்
மெல்லச் சிரித்தேன் !

புன்னகைத்தாய்
கை கொடுத்தாய்
மெல்ல அணைத்தேன்!

துள்ளிக்குதித்தாய்
முத்தமிட்டாய்
மனம் மகிழ்ந்தேன்!

உனை அணைத்துத்
தெருமுழுதும்
வலம் வந்தேன் !

ஆற்றில் கலந்தாய்
ஏரி குளம் நிறைந்தது
பலன் தந்தாய் !

காதலித்தேன்
என்னையே மறந்தேன்
கிராமத்து மழையே !

நகரம் வந்தேன்
பின்தொடர்ந்தாய்!

புன்னகைத்தாய்
மெல்லச் சிரித்தேன் !

துள்ளிக்குதித்தாய்
நீ சேரும் இடம்
சகதி கண்டேன்
திரும்பிவந்தேன் !

உன்னையே மறந்தேன்
நீ அவளில்லை
நகரத்து மழையே !

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *