— கவிஞர் காவிரிமைந்தன்.

 

 

தங்க நிலவே உன்னை உருக்கிதங்க நிலவே உன்னை உருக்கி …

பாடல்களாலேயே திரைப்படம் வெற்றியின் எல்லையைத்தொட முடியும் என்று நிரூபித்தவர் விஜய தே.ராஜேந்தர் ஆவார். மற்றுமொரு பாசமலர் என்று பேசப்படும் அளவில் தங்கைப் பாசத்தை திரையில் வடித்திருப்பார். ஆற்றல் என்று சொல்லும்போது, ஒருவருக்கு கதை சொல்லத்தெரியும் அல்லது எழுதத் தெரியும். ஒருவருக்கு இசையமைக்கத் தெரியும். ஒருவருக்கு பாடத் தெரியும். ஒருவருக்கு வசனம் எழுதத் தெரியும். ஒருவருக்கு நடிக்கத் தெரியும் என்று இருக்கையில் இத்தனையும் தன்னால் செய்ய இயலும் என்று சொல்வதைக்காட்டிலும் இவர் நிரூபித்த வெற்றிச் சித்திரங்கள் ஒன்றிரண்டல்ல.

அஷ்டவதானியாக அறியப்பட்ட இவர் வடித்த கவிதைகள்தான் திரையில் பாடல்களாயின. உருகவும் வைக்கத் தெரியும். தெம்மாங்கு பாட்டும் இவருக்கு வரும். காதலைச் சொல்வதிலும் வல்லவர். பாசத்தைப் பொழிவதிலும் இவர் முன்னவர். கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள், இசை, பாடுவது, இயக்கம், நடிப்பு என்று பன்முகம் காட்டும் டி.ராஜேந்தர் அவர்களைப் பாராட்டாத உள்ளங்கள் இல்லை.

தங்கைக்கோர் கீதம் படத்தில் இடம்பெற்ற இந்தப் பாடலை எஸ்.பி. பாலசுப்பிரமணியம் பாடியிருக்க, வரிகளை வரைந்து இசையை வடித்திருக்கிறார் விஜய டி.ராஜேந்தர். இந்தப் பாடல் வரிகள் கவியரசு கண்ணதாசனால் பாராட்டப்பட்டவை என்று அறியும்போது மெய்சிலிர்க்கிறது.

ஆம்,
ஜவுளிக்கடை பொம்மைக்கூட
கட்டுதம்மா பட்டுசேலை
உனக்கொன்னு வாங்கிடவே
ஏழை அண்ணன் ஏங்கிடவே
ஆசைப்பட்டு தொட்டிடுவேன்
காசைக் கண்டு விட்டிடுவேன்

என்கிற வரிகளைக் கேட்டு, யார் எழுதியது என்று அறிந்து டி.ராஜேந்தரை அழைத்து பாராட்டிய பெருமகன் கண்ணதாசன்!

கவியரசராலேயே பாராட்டப்பட்ட பெருமைக்குரிய பாடலாசிரியராக பவனிவந்த டி.ராஜேந்தரின் அண்ணன் தங்கை பாசத்திற்கு 1980ல் மலர்ந்த பாசமலரிது!

இனிமை சிந்தும் புல்லாங்குழல் எடுத்துக் கொடுக்க, அருமையான பாடல் தாலாட்டுபோல அசைந்து வருகிறது பாலுவின் குரலில்…

தங்க நிலவே உன்னை உருக்கி
தங்கச்சிக்கு தங்க நகை செஞ்சிடவோ
நட்சத்திரமே உன்னை உடைச்சி
விதவிதமா வைர நகை போட்டிடவோ
ஆரிரரோ ஆரிராரிரரோ
ஆரிரரோ ஆரிராரிரரோ

தங்க நிலவே உன்னை உருக்கி
தங்கச்சிக்கு தங்க நகை செஞ்சிடவோ
நட்சத்திரமே உன்னை உடைச்சி
விதவிதமா வைர நகை போட்டிடவோ
ஆரிரரோ ஆரிராரிரரோ
ஆரிரரோ ஆரிராரிரரோ

ஜவுளிக் கடை பொம்மை கூட
கட்டுதம்மா பட்டுச் சேலை
உனக்கொண்ணு வாங்கிடவே
ஏழை அண்ணன் ஏங்கிடவே
ஆசைப்பட்டு தொட்டு விடுவேன்
காசக் கண்டு விட்டு விடுவேன்
நாளும் வரும் நாளை
என்று காத்திருப்பேன் …
ஆரிரரோ ஆரிராரிரரோ
ஆரிரரோ ஆரிராரிரரோ

கண்ணீரில் நான் மிதந்து
கண்மணியைக் கரை சேர்ப்பேன்
பட்டினியா நான் கிடந்து
சீதனங்கள் சேத்து வைப்பேன்
தாலியேறும் நாள் வரைக்கும்
கண்ணிரண்டும் தூங்காது
கொட்டு மேளம் கேக்க
வேணும் சீக்கிரமே …

தங்க நிலவே உன்னை உருக்கி
தங்கச்சிக்கு தங்க நகை செஞ்சிடவோ
நட்சத்திரமே உன்னை உடைச்சி
விதவிதமா வைர நகை போட்டிடவோ
ஆரிரரோ ஆரிராரிரரோ
ஆரிரரோ ஆரிராரிரரோ

காணொளி: https://youtu.be/GmoyzOPtBnk

https://youtu.be/GmoyzOPtBnk

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “தங்க நிலவே உன்னை உருக்கி …

  1. ஒரு தலை ராகத்திலிருந்து  அடுத்து அடுத்து பலப் பாடல்கள்…அடுத்த தலைமுறை கவிஞர்களில் டி ராவிற்கு 
    அப்போதே நான் ரசிகன்…மற்றவர்கள் எழுதி தன் பேர் போடும் கவிஞரல்ல அவர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *