திரு அப்துல் கலாம்
தமிழ்த்தேனீ
எத்தனையோ மகன்கள் பிறந்திருக்கலாம்
மகான்களாய்த் சிலரதிலே திரிந்திருக்கலாம்
எத்தனையோ மனிதர்கள் பிறந்திருக்கலாம்
புனிதராய்ப் பலரதிலே திகழ்ந்திருக்கலாம்
எத்தனையோ பிறவிகள் பிறந்திருக்கலாம்
துறவியாய் அனைத்தையும் துறந்திருக்கலாம்
பலகோடி வகையாய்ப் பிறந்திருக்கலாம்
பலகோடி வகையாய்ச் சிறந்திருக்கலாம்
எல்லா உயிர்களையும் பிடித்திருக்கலாம்
எல்லா உயிர்க்குமே பிடித்திருக்கலாம்
மனிதராய் யாரும் பிறப்பதில்லை
வளர்ந்தபின் குழந்தையா யிருப்பதில்லை
பிறந்த பின் மனிதராய் வளர்வதில்லை
மாமனிதராய் பலரும் வாழ்வதில்லை
குழந்தையாய்ப் பிறந்து மனிதராய் வளர்ந்து
மாமனிதராய்த் திகழ்ந்து மேதையாய் மலர்ந்து
மனிதாபிமானம் கொண்டு மனிதருள் மனிதராய்
மனதோடு மனதாகப் புனிதராய் கலந்தவர்
திரு அப்துல்கலாம் இப்போது இறந்திருக்கலாம்
இவ்வுலகை விட்டு மறைந்திருக்கலாம்
இவ்வுலகம் மறக்காமல் இருந்தவர் வாழ்ந்தவர்
இன்னுமாயிரம் ஆண்டுகள் இருந்திருக்கலாம்
திரு அப்துல்கலாம் இறவாமல் இருந்திருக்கலாம்
நாம் இவரை எப்போதும் மறவாமல் இருக்கலாம்
அன்புடன்
தமிழ்த்தேனீ
அனைத்து உயிருக்கும் அவனே ஆதி
அவனை விடவா உயர்ந்தது ஜாதி?
மனிதமும்,உலகமும் காப்போம்,
மௌனம் உணர்த்தாத பொருளை
சொற்கள் உணர்த்தாது
அன்புடன்
தமிழ்த்தேனீ
http://thamizthenee.blogspot.com
rkc1947@gmail.com
http://www.peopleofindia.net