abdul k
(முன்னாள் கு​டியரசுத் த​லைவருக்கு இரங்கற் பா)
மு​னைவர் சி.​சேதுராமன் தமிழாய்வுத் து​றைத்த​லைவர்,
மாட்சி​மை தங்கிய மன்னர் கல்லூரி, புதுக்​கோட்​டை.
sethuramansingaram@yhoo.com

அன்பான அருளான பண்பான
பாரதத்தின் த​லைமக​னே!
பிறப்​பைச் சரித்திரமாக்கிய
இந்தியாவின் பிரபஞ்ச​மே!
எம்மில் கலந்து எம் கண்ணில் கலந்து
உள்ளில் கலந்து எம் ஊனில் கலந்து
விண்ணில் கலந்தாய் இன்று….!

மண்ணில் பிறந்தாய்!
மனிதரி​லே உயர்வானாய்!
விண்ணில் விதி பறக்க
விதி உன்​னை அ​​ழைத்தது​வோ…?
எண்ணத்தில் கருவானாய்!
இ​ளைஞர்களின் எண்ணத்தில் கருவானாய்…!
ஏ​ழையரின் ஏந்தலானாய்!
கண்களி​லே நீர் வழிய
எம்​மைக் கலங்கடித்து விட்டா​யே!
ஏவுக​ணை நீ ஏவிப் பாரில்
பாரதத்​தை உயர்த்திவிட்டாய்!
பாரதத்தின் த​லைமக​னே!
தமிழ்த்தாயின் திருமக​னே!
நீர் வி​தைத்த எண்ணங்கள்
நிதமும் எம்​மை வழி நடத்தும்
நீர்நி​னைத்த எண்ணங்கள்
நிச்சயம் நி​றை​வேறும்!
பார் புகழப் பாரத​மோ – என்றும்
உம் வழியில் பயணிக்கும்…..!

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *