-ரா. பார்த்தசாரதி

 

kalam

 

 

 

 

 

 

 

வையகம் போற்றும் சிறந்த விஞ்ஞானியே !
தன்னலம் கருதாத  தலைவனும் நீயே !
விருதுகள் பல பெற்ற  மாமேதையே !
தமிழ்நாட்டிற்குப் பெருமை சேர்த்த ஜனாதிபதியே !

இளைய சமுதாயத்தைக்  கனவு கொண்டு இலட்சியத்தை அறிவுறுத்தினாய் !
இந்தியா வல்லரசு  ஆகும் என மக்களிடையே  எடுத்துரைத்தாய் !
மாற்றுத் திறனாளிக்கு  எடை குறைவான காலணி  செய்துகொடுத்தாய்!
மெய்ஞ்ஞானத்தையும், விஞ்ஞானத்தையும் திறம்படத் தெளியவைத்தாய் !

அரசியலையும், விஞ்ஞானத்தையும் ஒருங்கே போற்றினாய் !
ஏவுகணைகளின்  நாயகன் எனப் போற்றப்பட்டாய் !
யாதும் ஊரே  யாவரும் கேளிர் என்பதை அகிலத்தில் உரைத்தாய் !
எளிமையும் பணிவும்  கொண்டு  பதவி வகித்தாய் !

தமிழினமே  உன்  இழப்பால்  கலங்கியதே !
நரம்பிழந்த வீணையாக  இன்று காணப்பட்டதே !
உன்  பிறப்பு  ஓர்  சம்பவமாக  இருந்ததே !
உன் இறப்பு  ஓர்  சரித்திரமாய் மாறியதே !

 

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *