-கவிஜி

உள்ளக் கசிவின்
உறுத்தலில்
ஒருவகை நெளியலாம்…

அல்லாத ஒன்றைக் கொண்டு
சூடிக் கொள்ளும்
சூட்சுமக் கயிறுகளின் புழுவில்
நீண்ட பசி
சிறு சிறு
வயிறாகலாம்…

கற்று மறந்த கல்வியை
வெற்றுப் புறம் தள்ளப்
பட்டுப் பாழாகும்
பரிதவிப்பில் தரிசனம் உடைந்த
ஒற்றைக் கண்ணாகலாம்…

சற்றே மறந்த
கணப் பொழுதைப்
பிசைந்து உருட்டி
உடல் முழுக்கப் பூசிக் கொண்ட
பூதமாகலாம்…

இல்லவே இல்லாத
கருந்துளையின்
சுவர்ப் பரப்பில்
அசைந்தாடும் எச்சிலின்
காமம் வழிந்தும் நெளியலாம்…

நம்பினோரின் நயம்பட
நர்த்தக நடனம்
நலம் சொல்லும்
நாளை நாளிலும்
அவ்வகையே தெளியலாம்…

உயிருக்குள் அறுந்தபடியே
தொங்குவது
திக்கென்று நின்றுவிட்ட
யாசக வேண்டுதலின்
விளிம்பாகவும் இருக்கலாம்…

இருக்கட்டும்…!

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *