-பா. ராஜசேகர்

இந்தியப்பெருங்கடல் ஓரம்
இளஞ்சிங்கம் துயில்வதைப் பாரீர் !
மக்கள் மனங்களில் புதைந்து
மனக்கண்ணில் அழுவதைப் பாரீர் !

வஞ்சங்கள் இல்லாத நெஞ்சம்
பிஞ்சுகள் இவரைக் கொஞ்சும்
தேசத்திற்கு இவரே தந்தை
பாசத்தில் திளைத்தாரே விந்தை !

மதஒற்றுமைக்கு இங்கில்லை நிகராய்க்
கற்பித்தலைக் கொண்டாரே உயிராய்…
பண்பாளன் மாமனிதர் மேன்மை
பாமரனும் அறிந்ததுதான் உண்மை !

விந்தை மனிதனே என் தலைவன்
என் சிந்தை நிறைந்த முதல்வன்
மாந்தருக்கு நீ விதைத்த அறிவு
நாளை ஆலமரமாகும் என் தெளிவு !

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *