கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்
கேசவ் ஓவியத்தைப் பார்த்ததும் ‘’சாந்தி நிலையத்தில்’’ சித்ராலயா கோபு வசனம் நாகேஷ் சார் ஒரு பொடியனைப் பார்த்து ‘’தம்மாத்தூண்டு பயலுக்கு தில்ல பாருடி’’ என்பார் நினைவுக்கு வந்தது….அடியேன் மிகவும் ரசித்த வசனம்…. வில்லுக்கு கீதை சொன்னதில், பாரதம் செய்ததில்,குவலயா பீடத்தின் கொம்பொசித்ததில் இப்படி பல ’தில்’ கொண்ட தம்மாத்தூண்டு பையன் பாகவதக் கண்ணன் தில் இருந்தாலும் அவன் ‘’தில் ஏக் மந்திரில்’’ குடியிருக்கும் தெய்வம் கோமாதாதான்…
அனன்ய பக்திக்கு வாத்சல்யம் காட்டும் அவதாரம் கண்ணன்….
”தம்மாத்தூண்(டு) ஆனாலும், தில்லாயர் ஆச்சியின்,
அம்மாக்கோண்(டு) ஆனாலும், ஆவுக்காய் -சும்மாத்தான்,
பாதம் பருகவிட்டு, பத்தாக் குறையாக,
காதுக்(கு) உணவாய் குழல்’’….கிரேசி மோகன்….