தீப்பந்தங்கள் எல்லாம் என்னை நோக்கியே குறி வைக்கப்படுகிறது கருகிப் போன என் தோல்களுக்கு வலி உணர்வு தெரிவதேயில்லை பாழாய்ப்போன என் மனதிற்குப் பாதகர்களின் கொடும் செயல் புரிவதேயில்லை!
கருகிப்போன என்னுடம்பின் தழும்புகளையும், நரம்புகளையும் எலும்புகளையும் எப்படித்தான் அடையாளம் கண்டு சித்திரவதை செய்கிறார்களோ…?
உணர்வுகளற்று உயிரும், கருகிப் போன உடல்தானே !
இனி, கருநாகம் தீண்டினாலென்ன? கழுகுகள் கொத்தினாலென்ன? கண்டம் துண்டமா நீ வெட்டினாலென்ன?
இறைவன் வகுத்த போதனையில்தானே வாழ்ந்தேன் ஏன் இந்தச் சித்திரவதையால் சாகிறேன் !
காலாவதியாகிப் போன என் ஆத்மா சாந்தியடைய…
இறைவா!
நீ தந்து விட வேண்டும் எனக்கொரு கல்லறை என் தாய் நாட்டில் எனக்கொரு மண்ணறை!
கொமைனி வீதி, வாழைச்சேனை-05 இலங்கை எனும் முகவரியைச் சேர்ந்த எனது பெயர் றியாஸ் முஹமட். மட்.ஓட்டமாவடி தேசியப் பாடசாலையில் உயர் தரம் -(2000-2002) கற்றதுடன், வெளிவாரி பட்டபப்டிப்பினை படித்து வரும் நான் தற்போது மத்திய கிழக்கு நாடான கத்தாரில், கத்தார் டெலிகம் கம்பெனி வேலை செய்து வருகின்றேன் பள்ளிப்பருவத்திலிருந்தே கலையில் ஈடுபாடு கொண்ட எனது எழுத்துப்பயணம் ஆரம்பத்திலேயே மித்திரன் வார மலர், தினமுரசு வாரமலர், சுடர் ஒளி, வீரகேசரி போன்ற பத்திரிகையில் ‘மாவடிச்சேனை முஸம்மில்” ‘றியாஸ் முஹமட்” என்ற பெயருடன் ஆரம்பமானது. இன்று ‘கல்குடாவின் எழுத்து” என்ற பெயருடன் முகநூல், டிவீட்டர் twitter ,orkut போன்ற இணையத்தளங்களிலும் இந்திய சஞ்சிகைகளிலும் வருவதுடன் மாத்திரமல்லாது, மத்திய கிழக்கு ‘தமிழ் டைம்ஸ்” பத்திரிகையில் தொடர்ந்து கவிதைகள், சிறுகதைகள், கட்டுரைகள், இஸ்லாமிய ஆக்கங்களை எனத் தொடர்கிறது.
மண் வாசணையோடு எழுதுவதே எனக்கு பிடித்திருக்கின்றது