மனதெல்லாம் வாசனை!
-எம்ரிஎம். யூனுஸ்
தொல்லைகள் கொள்ளையாகப்
பார்மீதில் மாறிப் போச்சு!
நல்லவராய் முகம்காட்டி
நயவஞ்சகத்தை மனதினிலே
பதுக்கி வைத்து விட்டுச்
சந்தர்ப்பம் எட்டும் போது
எட்டி நின்று உதைக்கின்றார்!
நாதியற்று அவன் அலைய…
பட்டி தொட்டியெல்லாம்
பாசாங்கு அவன் காட்ட
பித்தனாக இவன் மாற…
ஊமை வலியோடே
நாளெல்லாம் நடைபயில…
பந்த பாசமெல்லாம்
விலகி நின்றே
வேடிக்கை பார்க்கின்றார்!
நீதியெல்லாம் நிலைமாற
அநீதிக்குள் அலைபாய்ந்து…
அநாதரவாகத் திரிகின்றான்
இல்லறம் ஏதுமின்றி!
தின்று தீர்த்த
பலாப்பழ வாசனையாகவே
வாழ்வெல்லாம் முடங்கி கிடக்க…
மறுபடியும் வாழ்வின்
வாசனையை நுகர்ந்து விடத்
தெருவெல்லாம் சுற்றுகிறான்
வேலை தேடித்தேடியே!!