கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்
”பூபாள வேளையில், பால்பசு மேய்க்கவே,
கோபாலன் வந்தனன் கோகுலம், -மாபார,
பூலோகம் பார்த்ததால் பாரதம் செய்தானே,
மாலோல னுக்கும் மறப்பு’’….கிரேசி மோகன்….
———————————————
சூரி நாகம்மாளின் ஸ்ரீ ரமணாஸ்ரம லேகுலு….அஸிஸ்டெண்ட் லைப்ரேரியனை பகவான் சேவைக்கு பணித்தபோது
அவரது புத்தக தாபத்தை போக்குவதற்காக அவரிடம் பகவான் ஆறுதலாக ‘’சப்த ஜால மஹாரண்யம், சித்த பிரமண காரகம்’’ என்று பரிவோடு சொல்லி அவரை தேற்றினாராம்…..சாஸ்திரங்களைக் கற்றல், புலமை முதலானவை வாழ்க்கையில் புகழை தருமே தவிர ‘’முக்திக்கு முகுந்தனே’’….
‘’சொற்கள் பெருங்காடு, சித்தம் குழம்பிடும்
அற்பம் அவற்றுள் அணுகாதே, -தர்கத்திற்(கு)
ஆகவே கல்வி, அனுபூ தியைப்பெற
பாகவத பாலனிடம் போ’’….கிரேசி மோகன்….