-ரா. பார்த்தசாரதி 

நள்ளிரவில்  சுதந்திரம் பெற்றோம்
வெள்ளையனே வெள்ளியேறு  எனச் சொன்னோம்!

அரசியல்வாதிகள்  ஊழலை மறைப்பதற்குச் சுதந்திரம்
ஏன்  என்று கேட்பவர்களுக்குச் சிறையே  அடைக்கலம்!

நாட்டிற்குச் சுதந்திரம் வாங்கித்தந்தவர்கள்  தியாகம்
இன்று கெடுதல் நடக்காமலிருக்க ஓர் யாகம்!

ஆன்மிகவாதிகளுக்கும் அரசியல்வாதிக்கும் சுதந்திரம்
நல்லதைச் செய்பவர்களைத்   தடைசெய்யுதே  சுதந்திரம்!

பறவைகள்  பறப்பதற்கு  என்றும்  சுதந்திரம்
பாவைகளுக்கு  எதிலே  இன்று சுதந்திரம்?

அறுபத்தொன்பது  ஆண்டுகள் ஆயினும்  வறுமைக்கோடு
இன்றோ ஏழை  கூக்குரலின்  கூப்பாடு !

கவிஞர்கள் முழக்கிய  சுதந்திரம்  எங்கே?
இன்றும் பெயரளவில் இயங்குது இங்கே!

இளைஞர்களே நீங்கள் சுதந்திரத்தை நெஞ்சினிலே நிறுத்துங்கள் !
தாய்நாட்டின் முன்னேற்றத்திற்குக் கடினமாய் உழைத்திடுங்கள் !

ஊழலையும் கொடுமைகளையும்  எதிர்த்துப் போராடுங்கள் !
ஊக்கத்துடன் போராடி வெற்றி காணுங்கள் !

சுதந்திரம் சும்மா வந்துவிடவில்லை  என நினையுங்கள் !
அதுவே  பல தியாகிகளின்  தியாகம் என நினைந்திடுங்கள் !

இன்று சுதந்திரத்தின்  உள்ளுணர்வு உங்களைத் தூண்டட்டும் !
இன்றைய பாரத இளைஞர்கள் ஒற்றுமை ஓங்கட்டும் !

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *