இந்திய சுதந்திரதின வாழ்த்துக்கள்
இருளில்
வந்ததோர் விடியல்
இந்திய தேசத்தின்
சுதந்திர விளைச்சல்
முடிந்ததோர்
ஆங்கிலேய ஆதிக்கம்
பிறந்ததோர்
பாரத விடுதலை
நடந்ததோர்
அறப்போர் அன்று
அண்ணல் காந்தியின்
அஹிம்சை வழியில்
துணிந்ததோர்
சுபாஷ் சந்திரபோஸ்
புரிந்ததோர்
வீரமிகு விடுதலைப் போர்
புனைந்ததோர்
வீரமிகு கவிதைகள்
மகாகவி பாரதியின்
விடுதலைக் கீதங்கள்
ஓட்டியதோர்
கப்பல் சுதேசமாய்
சிங்கத்தோன்
கப்பலோட்டிய தமிழனாம்
களைந்ததோர்
உயிரையாம் இளைஞன்
வாஞ்சிநாதன் எனும்
வீரமிகு தமிழன்
கனவிலோர்
சுதந்திரம் கண்டவன்
பாரதியெனும் எம்
தமிழ் முப்பாட்டன்
சீறியதோர்
சிங்கமென பாளையகோட்டையில்
கட்டபொம்மன் எனும்
காளையாம் பாரதத்தில்
கூவியோர்
அறைகூவ;ல் விடுத்த
அமரர் கலாம் தனின்
கனவு நனவாகு,ம்
புதியதோர்
உணர்வுடன் வளர்ந்திடும்
பாரதம் ஆசியாவின் ஒளியாய்
உயர்த்திடுவீர் பெருமை தனை
வலியதோர்
வல்லரசாக மாறிடும்
வழிதனில் வளரட்டும்
சுதந்திர இந்தியா
வளர்ந்ததோர்
இளைய பாரத இளைஞர்
பாரின் பல நிறுவனங்களின்
பாரிய தலைவர்களாய்
மகிழ்ந்ததோர்
தமிழன் இவன் இதயமே !
மகிழ்வுடன் வாழ்த்திடுவேன்
என் இனிய இந்திய இதயங்களை
விழித்ததோர்
சமுதாயம் இதுவென நாட்டில்
இல்லாமை இல்லாமல் ஆக்கிட
முனந்தோர் சாதனைகள் புரிந்திடுக
வாழ்த்துதோர்
இந்திய சுதந்திரதின
வாழ்த்துக்கள் கூறி
வாழிய வாழிய
காலம் காலமாய் என்றும்
கலாமின் கனவுகளோடு
வாழ்த்துக்களோடு
சக்தி சக்திதாசன்