கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்
கிரேசி மோகன்
இந்த ஓவியத்தை ”கேசவ்” ஆடிப் பூரத்திற்காக அனுப்பியிருந்தார்….
அச்சமயம் அடியேன் நாடகம் போட நாமக்கல் சென்றிருந்தேன்….
வழக்கமான வெண்பா அனுப்ப அங்கு கம்ப்யூட்டரும் இல்லை,
கேசவ் ஆண்டாள் போல் தூதாக அனுப்ப கிளியும் இல்லை….
ஆகவே இன்று….என்ன ஆச்சரியம் இன்று ”கேசவ்”வுக்கு
KSA TRUST “CHAMPION” பட்டம் கலைத்துறைக்காக கொடுத்தார்கள்….
கொடுத்தது அடியேன்….கொடுக்க வைத்தவன் கண்ணன்….
மேலும் கேசவ்விடம் பேசியபோது ”ஆண்டாள் தூதாக கிளியை
அனுப்பியதன் தாத்பர்யத்தைச் சொன்னார்….வடமொழியில்
கிளியை சுகம் என்பார்களாம்….பாகவதம் சொன்ன சுகமுனிக்கும்
வதனம் கிளிரூபம்….
இன்று கேசவ்வுக்கு விருது வழங்கும்போது…. பேசும்போது ”வெற்றிகரமான ஆணுக்கு பின் ஒரு பெண் இருப்பது போல
CHAMPIONக்கு பின்புலமாக ஒரு ஜீனியஸ் கட்டாயம் இருந்தாக வேண்டும்….
கேசவ் என்ற இந்த CHAMPION பின்புறம் இருக்கும் GENIUS கண்ணபிரான்….
வெண்பாவுக்கு கருத்து கிடைத்தது….
திருவாடிப் பூரத்தாள் திருவரங்கனுக்கு தூது….
———————————————————————————
‘’வேத சுகக்கிளியை, தூதாய் அனுப்புகிறாள்,
கோதை திருவரங்கக் கேள்வர்க்கு(கணவருக்கு), -போதிதன்(EVENT)
ஆம்பியன்ஸை(AMBIENCE) கேசவ் , அழகாய்ப் படமளித்தாய்,
சாம்ப்பியன்(CHAMPION)நீ, ஜீனியஸ்அச்(GENIUS) சேய்(கண்ணன்)’’….கிரேசி மோகன்….
சேய்- ஆயர்பாடி குழந்தை கண்ணன்….