-மீ.விசுவநாதன்

குளிர்ந்த நீரில் தினந்தோறும்
–குளித்து உன்னை வழிபடுவேன்!
ஒளிர்ந்த உன்தன் முகம்பார்த்து                     Lord_Siva
–உடம்பில் திருநீறு நானணிவேன் !
கனிந்த ஞானம் வரவேண்டிக்
–கவனத் துடனே தவம்செய்வேன் !
புனிதன் போலத் தோன்றுவதால்
பொய்யாம் முகத்தை மூடிவிட்டேன்!

எவனோ இல்லை நானேதான்
–என்றே கர்வக் கூத்தடிப்பேன் !
கவன மாக இருந்தாலும்
–கள்ள உள்ளம் நீயறிவாய் !
சவமாய் இருக்கும் மனம்வேண்டும்
–சரியாய் எனக்குள் நீவேண்டும் !
சிவனே நீயும் நான்தானே
–சித்த புருஷ உயிரோனே !              

(அறுசீர் விருத்தம் வாய்பாடு: மா, மா, காய், மா, மா, காய்)

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *