krishna1

  எந்தவேலை ஆனாலும், எந்தவேளை ஆனாலும்,
  நந்தலாலா நிந்தன் நினைவாக -அந்தரங்க
  பாவம் தனில்மூழ்கி, பார்க்கும் இடத்திலெல்லாம்,
  நீவந்து நீலமாய் நில்!

  இல்லா ததைத்துரத்தி, செல்லா ததைச்சேர்த்து,
  பொல்லா தவனென்ற பேர்வாங்கி – நில்லாது,
  விட்டிலென மாயா வெளிச்சத்தில் வீழாது,
  விட்ட(ல்)இருள் வண்ணன்தாள் வீழ்!

  அக்கரைப் பச்சை அணுகா தவர்களுக்கு
  அக்கறை காட்டிட ஆயர்க்காய் – இக்கரை
  ஆறெமுனா தீரம் அடைந்தவன், கம்சனுக்கு,
  நேரெதிரி யாய்வந்த நட்பு!

  (அவுணன் – ராக்ஷசன்)

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *