நல்உழைப்புக்கு வணக்கம்!
– சித்ரப்ரியங்கா பாலசுப்ரமணியன்
(திரைத் துறையினருக்காக)
சுட்டெரிக்கும் கோடையிலும்
கத்திரி வெயில் தனிலும்
பகலவனையும் சாந்தப்படுத்திப்
பகலிரவுதான் பாராவண்ணம்
உழைப்பின் கண்நோக்கி
ஊர் பலவும் விட்டு வந்து
சினிமா எனும் வேடந்தாங்கலில்
சிறப்புறவே தஞ்சம் புகுந்து
பற்பல பிரிவில் சாதிக்கும்
கற்றறிந்த நற்பறவைகள்,
தம் வலி தான் மறந்து
நாள் நேரம் யாவும் மறந்து
மனைவி மக்கள் மற்றும் மறந்து
பிறர் வலி எனும் பேரிடர் களைந்து
பொன்மனச் செம்மலெனத் தான்
நல் மனங்கள் பாராட்டும் பெற்று
பொலிவுற்றுத் திகழ்ந்திடவே
அகம் குளிர வாழ்த்திடுவோம்
அவர்தம் உழைப்புக்கு வணக்கம் செலுத்தி
உயர்வுக்குமே தோள் கொடுப்போம் நாமே!