-மீ.விசுவநாதன்

எவ்வளவு நாளாச்சு
ஒன்னப்பாத்து என்றார்
எதிரில் வந்தவர்
ஆமாம்…
…நீங்க சௌக்கியமா?
ரொம்ப சௌக்கியம்…
வா நம்மாத்துக்கு…
ஒரு காப்பி குடிச்சுண்டே பேசலாம்…
நல்ல மனுஷா நீங்க…!
ஆத்துக்காரி கொழந்தைகள
அழைச்சுண்டு அவசியம் வா…
விலாசம் சொல்லி நடந்தார்…
போனேன்…
விலாசம் இருந்தது அவரில்லை!

அந்த வீட்டு வெளிச்சுவரில்
ஒரு சுவரொட்டி விளம்பரம்…
“செய்கூலி இல்லை
சேதாரம் இல்லை
வாங்க தங்கம் வாங்க”

வாங்கிய நகையில்
தங்கமே இல்லை!

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *