எவ்வளவு நாளாச்சு
ஒன்னப்பாத்து என்றார்
எதிரில் வந்தவர்
ஆமாம்…
…நீங்க சௌக்கியமா?
ரொம்ப சௌக்கியம்…
வா நம்மாத்துக்கு…
ஒரு காப்பி குடிச்சுண்டே பேசலாம்…
நல்ல மனுஷா நீங்க…!
ஆத்துக்காரி கொழந்தைகள
அழைச்சுண்டு அவசியம் வா…
விலாசம் சொல்லி நடந்தார்…
போனேன்…
விலாசம் இருந்தது அவரில்லை!
அந்த வீட்டு வெளிச்சுவரில்
ஒரு சுவரொட்டி விளம்பரம்…
“செய்கூலி இல்லை
சேதாரம் இல்லை
வாங்க தங்கம் வாங்க”
பணி : காட்பரி நிறுவனம் (ஓய்வு) தற்சமயத் தொழில் : கவிதை, சிறுகதை, குறுநாவல், கட்டுரைகள் எழுதுவது. இலக்கியம், ஆன்மீகச் சொற்பொழிவு. பள்ளி மாணவ, மாணவியர்களுக்குக் கதைகள் சொல்வது. சுபமங்களா, கணையாழி, தினமணிகதிர், தாமரை, அமுதசுரபி, கலைமகள், புதியபார்வை ஆகிய இதழ்களில் சிறுகதைகள் வெளியாகி இருக்கிறது.
நூல்கள்: “இரவில் நனவில்” என்ற சிறுகதைத் தொகுதி, மனிதநேயம், “காலடி சங்கரரின் கவின்மிகு காவியம்” கவிதைத் தொகுதிகள்.
இரவில் நனவில் சிறுகதைக்கு கோயம்புத்தூர் “லில்லி தேவசிகாமணி” இலக்கிய விருது இரண்டாம் பரிசு கிடைத்தது.(வருடம் 1998):
பாரதி கலைக்கழகம் 2003ம் ஆண்டு “கவிமாமணி” விருதளித்துக் கௌரவம் செய்தது.