-ஆர். எஸ். கலா

வான் மழை பூமியை நனைக்க
நீர்பட்ட நிலத்துக்கு ஈரப்பசை கிடைக்க
தண்ணீர் தேங்கிய மண்ணில்
புதையுண்ட விதை முளையிட்டுத்
தளிரிட்டுக் கொழுந்து
வளர்ந்து இலையாகிச் செடியாகி
கொடியாகும்!

வளர்ந்த செடியோ
கட்டு வளர்ந்து
பல வேர் விட்டுக்
கிளைகள் நிறைந்து
அதிகக் குச்சியைச் சுமர்ந்து
விருட்சமாகும்!

சாலை ஓரமாக நட்ட செடி
தெருவோரம் நிழல் கொடுக்கப்
பாதையெல்லாம் பூக்கள் கிடக்க
வழிப்போக்கனும் அதைப் பார்த்து
ரசிக்க…
அடடா பசுமையான நாடு உன் நாடு
ஐயோடா குளுமையான ஊர் உன்னுடையது
ஆமான்டா குளுகுளுப்பாக உள்ளது உன் தேசம்
ஜாலி டா குளிர்ச்சியாய் இருக்கு  நீ இருக்கும்
இடம்…
தயக்கத்தோடு வந்தவளும்
மயங்கி நிற்க மயக்கத்தோடு
கூட்டி வந்தவனும் தயங்கித்
தவிக்கும் சோலை வனமாக
மாறவேண்டும் பசுமை படர்
நிலமாக ஆகவேண்டும்!

கதிரவன் வருகையில் பச்சை மரமாக
அதைத் தாங்க வேண்டும்
பகலவன் அதனுடன் உறவாட வேண்டும்
சூரியனின் கதிர்கள் கரத்தின்  கிளைகளான
இடையால் பூமியைத் தொட வேண்டும்
மாலையானதும் ஞாயிறு மெல்ல மறைந்து
செல்கையில் இத்தனை அழகு கொண்ட
பசுமை படர் உலகம்  அல்லவா என்னும்
எதிர்காலம் வ(ள)ரவேண்டும்!

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *