மீ.விசுவநாதன்

images (1)

மானேந்தி யப்பரே, மயிலேறும்
மகனுடைச் சீடரே, பெருந்தீத்
தானேந்தும் கையரே, ஒருகாலைத்
தவநிலை யோகியே, உள்ளத்
தேனேந்தும் பூவரே, மறுகாலைத்
திறனுடன் மாற்றிய கலையே !
ஊனேந்து(ம்) ஆசையை விழியாலே
பொசுக்கிட வந்தருள் சிவனே !

(அறுசீர் விருத்தம் வாய்பாடு:
காய், விளம், காய், விளம், விளம், மா)
(பிரதோஷ தினம் 10.09.2015)

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *