கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்
ரிக் வேதத்தில் என்று நினைக்கிறேன்….ஒரு மரத்துக் கிளையில் இரு பறவைகள்….ஒன்று சாக்ஷி பூர்வமாய் அமர்ந்திருக்க, மற்றது கிளை விட்டு பறந்து சென்று உலக விவகாரங்களில் ஈடுபட்டு, உருக்குலைந்து திரும்பும் கிளைக்கு…. கேசவ் ஓவியத்தில் பறவைகளுக்கு பதிலாக கறவைகள்…. கிளை(உறவு) கண்ணன்… சபாஷ் கேசவ் இன்று வேதசாரத்தை வரைந்திருக்கிறீர்கள்….
’’ஓங்கி உலகளந்தோன், உச்சியில் உத்தரம்,
தாங்கிடும் வெண்ணைக்காய் தாவிட, -ஈங்கிதனைக்,
கண்(டு)ஆன்ம ஆவுக்கு கால்வல்யம் , மற்றது,
திண்டாடும் ஜீவன் திகைத்து’’….கிரேசி மோகன்….
கைவல்யம் போல் -கண்ணனின் கால்வல்யம்….