நாகினி

 

இலங்கை தீவு
தனி தமிழ் ஈழம் கேட்கும்
தமிழர் நிறைந்த பாவு..

இலக்கியத்திலும் தமிழரோடு
பழங்காலத்தில் ஈழம் தொடர்பு
அடையாளம் காட்டும் பட்டினப்பாலை
சொல்லும் ஈழத்து உணவு..

குருதியில் வரைந்த தமிழர் காவியம்
முள்ளிவாய்க்கால் படுகொலை
அரங்கேற்றம் நித்தம் இனவெறியர்களால்
இலங்கை தமிழர் சாவு..

தமிழீழ விடுதலைப்புலி தலைமையை
தலைமேல் ஏற்று புரட்சிப்பாதை விடியலில்
தனித் தமிழீழம் வேண்டுவதே
தமிழ்மக்கள் எழுச்சி திணவு..

ஊர் உறவு சுற்றம் நட்பு இழந்து
நாடு விட்டு அகதியாய் உழலும்
ஈழத்தமிழர் உரிமை நாடும் ஈழம் மலர
வாழ்த்தும் மனதார உலகோர் நாவு!

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *