மீ.விசுவநாதன்

Aneguddi-Ganesh
ஆனை முகனைக் கேட்டேன் -மன
ஆழம் காட்டு என்று !
தானை விட்டு வந்தால் – அது
தானே தெரியும் என்றான் ! (1)

நாளில் ஒன்று பேசும் – என்
நாவைக் கட்டு என்றேன் !
தாளின் பற்று வைத்தால் – அது
தனியே போகும் என்றான் ! (2)

உன்னை எனக்குக் காட்டு-என்
உயிரே நீதான் என்றேன் !
என்னை உலகாய்ப் பார்க்க -குரு
இருபைத் தேடு என்றான் ! (3)

நீயே குருதா னென்று – மனம்
நெகிழ்ந்து வீழ்ந்து கேட்டேன் !
வாயை மூடிக் கொண்டு – என்
வாக்கில் அமர்ந்து கொண்டான் ! (4)
(17.09.2015)

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *