சிரிப்பதிகாரம் (3)
———————————–
சிரிப்பொரு சஞ்சீவி, சீக்காளி தன்னை,
உருக்கும்நோய் தீர உதவும், -இருக்கலாம்,
பத்தியம், மாத்திரை, பக்க விளைவின்றி
சத்திய மேவ சிரிப்பு….
”இப்பநான் பீச்சில் இறைக்க நடப்பது,
உப்பெடுத்து இவ்வுடலை ஒப்பேற்ற, -அப்பெருமான்,
காந்தி மகான்தன், கனிவான பொக்கையில்,
சேந்திய உப்பே சிரிப்பு”…….