மகாத்மாவும், கல்வித் தந்தையும்!
-சித்ரப்ரியங்கா பாலசுப்ரமணியன்
அஹிம்சையை ஆயுதமாய்க் கொண்ட அண்ணலே
ஆர்வமுடன் உமைஇன்று நினைவு கூா்வோமே
இந்திய தேசத்தின் பிதா நீர் இல்லையெனில்
சுதந்திரக் காற்றை நாங்கள் சுவாசிக்க இயலுமா?
உயரிய வழியில் தான் போராட்டம் பல நடத்தி
நாட்டின் மகாத்மாவாய் நாளும் பலர் மனதில் நீரே
கதராடை மகத்துவத்தை அனைவர்க்கும் உணர்த்தி
கண்கண்ட கடவுளாய்த் தூய மனதோடு நின்றீரே
பலர் மனதைப் பற்றிய தீண்டாமைப் பேய்தான்
பகலவனைக் கண்ட பனிபோல் விலகியது உம்மால்
நற்குணங்களின் நாயகன் நீர் பிறந்த நாளில் தான்
கல்விக் கண் தந்த காமராஜருமே விட்டுப் பிரிந்தார்
தாய்மண்ணின் பெருமை தரணியெல்லாம் சிறக்கத்
தன்னலமற்ற நன்மகனார் அளித்த கல்வியே சாட்சி
கஷ்டங்கள் பல தாங்கித் திட்டங்கள் பல அர்ப்பணித்த
கர்ம வீரர், படிக்காத மேதை அவரையும் பணிவோமே
நன்மக்கள் இருவரை இன்று நினைக்கின்ற கடமையே
நாட்டு மக்கள் நம் அனைவரின் தலையாயக் கடமையே
ஆட்சிகள் பல மாறிடலாம், காட்சிகள் பல மாறிடலாம்
ஆதவன் தம் புகழ் போல உங்கள் புகழ் நீடு வாழும்!