எங்கே போச்சு அந்தப் பலப்பம்?
-சேசாத்ரி பாஸ்கர்
எல்லோரும் பார்த்ததுதான்
எல்லோரும் உடைத்ததுதான்
எல்லோரும் முகர்ந்ததுதான்!
அது தனி உலகம்
தலைகுனிந்து கருப்புச் சட்டத்தைக்
காதல் செய்த காலம்!
வெண்மைப்புரட்சி வியாபித்த நாட்கள்
தொலைத்துத் தேடுவது பிறப்பு சுகம்
கிடைத்தது உடைந்தாலும்
உடையாதது மனம்!
அது எங்கெங்கும் வியாபித்திருக்கும்
காலடியில் மேஜையில் ஜேபியில்
சில நேரம் தூங்கும் சிறுமி கையில்
கைக் கொள்ளுதல் அழகு!
தேடிப் பாரும் ஓர் நாள் உம் வீட்டை
எங்காகிலும் அது கிடக்கும்
இருப்பின் அதுவே பொக்கிஷம்!
எங்கே போச்சு அந்தப் பலப்பம்?