ஓவியக்கவி கலில் கிப்ரான் கவிதைகள் – 20

0

சி. ஜெயபாரதன்.

 

கலில் கிப்ரான்

(1883-1931)

ஓவியக்கவி கலில் கிப்ரான் கவிதைகள்

மூலம் : கலில் கிப்ரான்

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

நமது பூமி

நமது பூமி
____________________________

“நான் நாட்டியம் ஆடவோ, ஊது கொம்பை ஊதவோ, முரசை அடிக்கவோ நீ விரும்பினால், என்னை ஒரு திருமண விருந்துக்கு அழைத்திடு ! இடுகாட்டிலிருந்து என்னை வெளியே இழுத்துக் கொண்டு வந்திடு !”
கலில் கிப்ரான். (The Narcotics & Dissecting Knives)
___________________

பிரபஞ்சத்தின் மகத்துவம்
___________________

எமது குப்பைக் கழிவுகளை
எல்லாம்
உனது நெஞ்சில் திணிக்கிறோம் !
கதிரடிக்கும் நிலத்தில் கோதுமைப்
பயிர்கள் சேர்ப்பாய் நீ !
கொத்துக் கொத்தாய்த் திராட்சைக்
கொடிகள் வளர்ப்பாய் நீ !
உலோகத் தனிமங்கள்
எடுத்து நாங்கள் செய்வோம்
பல பீரங்கிகள்
வெடி குண்டுகள் ! ஆனால்
எமது தனிமங்களில் நீ
முளைக்கச் செய்வாய்
முல்லையும் ரோஜாவும் !
எத்துணைப் பொறுமை உனக்கு
வையமே !
எத்தகைப் பரிவு உள்ளது
உனக்கு !
கிழக்கு மேற்காய்ப் பிரபஞ் சத்தில்
பயணம் செய்த போது
இறைவன்
பாதத்தால் உண்டான
நீயோர்
அணுத்தூசிக் கோளம் !
___________

அல்லது தீப்பொறி ஒன்று
நித்திய
உலையி லிருந்து
எறியப் பட்டதா ?
விண்ணைத் தொட்டு விடும்
அண்டக் கிளைகள்
பரப்பிடும் இறைவனின்
மரமாய் வளர
நிலத்தில் போட்ட
நீ ஒரு விதையா ?
அல்லது
பூதங்களின் பூதக் குழல்களில்
ஓடும் இரத்தத்தின்
ஒரு துளியா ?
அல்லது
அவனது நெற்றியில் துளிர்த்த
வேர்வையில் உதித்த
ஓர் முத்தா ?
______________

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *