கவிஞர் காவிரிமைந்தன்.

Salil Chowdary_stampபூவண்ணம் போல நெஞ்சம் …

அழியாத கோலங்கள் திரைப்படத்தில் இடம்பெற்ற பாட்டு! இந்திப்பட இசை அமைப்பாளர் சலீல் செளத்ரி இசையில் பிரதாப்போத்தன் – ஷோபா நடிப்பில், ஜெயச்சந்திரன் பி.சுசீலா பாடிய பாடலாய், பூவண்ணம் போல நெஞ்சம்… இளம்காதலர்களின் இனிய உரையாடல்கள் தொடர்ந்தவண்ணமிருக்க, சின்னஞ்சிறு சிரிப்பும் சந்தோஷப்பூக்களும் சிதற, உதடுகளின் அசைவுகள் இன்றி பின்னணியில் மட்டும் குரல்சேர்ப்பு நடக்கிறது.

மெளனங்களால் வரையப்பட்ட காதல் கவிதைக்குச் சுகமான மெட்டமைத்து, வார்த்தைப் பூக்களை வார்த்தளித்திருக்கிறார் கவிஞர் கங்கை அமரன். இனிமை தவழும் இளமை ததும்பும் பாடலில் இன்பம் குறைவில்லாமல், இசையால் ஆபரணம் கட்டியிருக்கிறார்கள் சலீல் செளத்ரி.

காதலின் அடர்த்தி அதிகமாகும்போது சொந்தங்கள் இந்தப் பிறவியும் தாண்டி ஏழேழு பிறவிகளிலும் தொடர வேண்டும் என்கிற ஆவலைப் பதிவு செய்யத் தவறுவதில்லை. மலர்களின் இதழ்விரிப்புகூட மெளனமாய்தான் நடக்கிறதல்லவா? பெண்மையின் நளினங்கள் இன்பம் கூட்டும் காதலிலே எத்தனை ரசங்கள்? ஆண் இதனை அனுபவிக்கவே பிறந்தானோ? பெண் இதனைப் பரிசளிக்கவே பிறந்தாளோ? இருவரின் கூடலில் இன்பத்தின் கொள்ளையிதோ. பாடலிலே வார்த்தைகளால் பரிமாறப்பட்டிருக்கிறது!

படர்ந்துவிடும் கொடிபோல் பாவை தலைவன் மடியில் சாய, தொடர்ந்து வரும் இன்பங்கள்பற்றி விரிவுரை தேவையில்லை. ஷோபாவின் எதார்த்த நடிப்பில் காதல் கவரிவீசுகிறது!!!

               பூ வண்ணம் போல நெஞ்சம்1     பூ வண்ணம் போல நெஞ்சம்     பூ வண்ணம் போல நெஞ்சம்2

ஆண்:
பூவண்ணம் போல நெஞ்சம்
பூபாளம் பாடும் நேரம் பொங்கி நிற்கும் தினம்
எங்கெங்கும் இன்ப ராகம் என்னுள்ளம் போடும் தாளம்

பெண்:
பூவண்ணம் போல நெஞ்சம்
பூபாளம் பாடும் நேரம் பொங்கி நிற்கும் தினம்
எங்கெங்கும் இன்ப ராகம் என்னுள்ளம் போடும் தாளம்

ஆண் – பெண்: பூவண்ணம் போல நெஞ்சே… ஹே… ஏஹே…

ஆண்: ஆஹாஹா…

பெண்: ஆஹாஹா…

பெண்:
இனிக்கும் வாழ்விலே என் சொந்தம் நீ
எனக்குள் வாழ்ந்திடும் என் தெய்வம் நீ

ஆண்:
பிறக்கும் ஜென்மங்கள்
பிணைக்கும் பந்தங்கள் என்றென்றும் நீ

பெண்:
இனிக்கும் வாழ்விலே என் சொந்தம் நீ
எனக்குள் வாழ்ந்திடும் என் தெய்வம் நீ

ஆண்:
பிறக்கும் ஜென்மங்கள்
பிணைக்கும் பந்தங்கள் என்றென்றும் நீ

பெண்:
இணைந்த வாழ்வில் பிரிவும் இல்லை
தனிமையும் இல்லை

ஆண்:
பிறந்தால் எந்த நாளும்
உன்னோடு சேர வேண்டும்

பெண்:
பூவண்ணம் போல நெஞ்சம்

ஆண்:
பூபாளம் பாடும் நேரம் பொங்கி நிற்கும் தினம்

பெண்:
எங்கெங்கும் இன்ப ராகம்
என்னுள்ளம் போடும் தாளம்

ஆண் – பெண்: பூவண்ணம் போல நெஞ்சே… ஹே… ஏஹே…

ஆண்:
படிக்கும் பாடமோ உன் உள்ளங்கள்
துடிக்கும் வேகமோ என் வெள்ளங்கள்

பெண்:
கனிக்குள் வாட்டங்கள்
அணைக்கும் ஊட்டங்கள் என் இன்பங்கள்

ஆண்:
படிக்கும் பாடமோ உன் உள்ளங்கள்
துடிக்கும் வேகமோ என் வெள்ளங்கள்

பெண்:
கனிக்குள் வாட்டங்கள்
அணைக்கும் ஊட்டங்கள் என் இன்பங்கள்

ஆண்:
இணையும்போது இனிய எண்ணம்
என்றும் நம் சொந்தம்

பெண்:
இமைக்குள் ஏழு தாளம்
என்றென்றும் காண வேண்டும்

ஆண்:
பூவண்ணம் போல நெஞ்சம்

பெண்:
பூபாளம் பாடும் நேரம்
பொங்கி நிற்கும் தினம்

ஆண்: எங்கெங்கும் இன்ப ராகம்
என்னுள்ளம் போடும் தாளம்

ஆண் – பெண்: பூவண்ணம் போல நெஞ்சே… ஹே… ஏஹே…
ஹே… ஏஹே… ஹே… ஏஹே…

காணொளி: https://www.youtube.com/watch?v=0hNP6lc52tM

https://www.youtube.com/watch?v=0hNP6lc52tM

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *