ஸ்ரீ மாதா அமிர்தானந்தமயி சரிதம்

மீ.விசுவநாதன்

( பகுதி: மூன்று )

“பிள்ளைப் பருவம்”

amv

தந்தை சுகுணானந்தர்,
தாய் தமயந்திக்கு
விந்தையான செல்வம்
சேய் சுதாமணி !
முந்தைய பிறப்பின்
மிச்சம்
வாய்த்த சிறப்பின்
உச்சம் இந்தக்
“கண்ணன்” பிரியமணி !

கார்மேக நீல வான்போல்
அவளுக்குக்
கருநீல உடம்பு !
நீர்சேர்த்த நீள்விழிகள்
திருமூல ஞான வரம்பு !

“இளவயதிலே இறைபக்தி”

அவள்
இரண்டு வயதில்
பேசினாள்!
மூன்று வயதில் பாடினாள்!
நான்கு வயதில்
நாமணக்கக்
கருங்குயிலாய் மாறி
கண்ணன்
பேரைக் கூவினாள் !
கடற்கரையில்
கண்ணன் தேடி ஓடினாள்!
அதனாலவள்
அண்ணன் கையால்
அடிவாங்கினாள் !

ஐந்தில் வளைந்து
பள்ளியில் பாடம் கேட்டாள் !
ஐயம் களைந்து
ஆசிரியர் பிள்ளை என்று
அனைவரும் உச்சி மோந்தார் !

சகதோழியர் தோழரின்
சங்கடம் கேட்கும்
அகத்தினைப் பெற்றவள் !
தன்கடன்
அவர்துயர் தீர்க்கின்ற
“அம்மா”வின்
முகத்தினை உற்றவள் !
அன்பு
இளகிய மனம் பெற்றவள்!
அதனாலே
அந்த மீனவச் சேரிச்
சோலையில்
தனி மணம் பெற்றவள் !

பாடலை இயற்றி
கண்ணன்
தேடலைச் செய்தவள்
பக்தி
ஆடையை நெய்தவள் !
தன் அப்பாவிடம்
இமயமலைக்கு
போகணும் என்றவள் !
தன் தோள் மீது
தூங்கியே
ஆகணும் என்ற
அப்பாவின் தோளிலே
மெய்யாகப் படுத்தவள் !
விழித்ததும்
பொய்யான வாழ்க்கையைப்
பூப்போல உதறிய
மெய்ஞானி ஆனவள் !

…….(நம்மோடு இன்னும் தொடர்வாள் அம்மா)

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *