இசைக்கவி ரமணன்

 

nishkrodh-copy

என் தேச நாயகி
எனையாளும் உன்மணி
என் நேச ராணி நீ
எப்போதும் தேவை நீ

என் நினைவும் என் கனவும்
நின் விரலில் சோழி
இடையில் நீ இளைப்பாறும்
ஏகாந்த ரேழி
உன் கண்கள் உன் கால்கள்
போதாது நாழி
உயிருக்குள் முத்தமிடும்
ஒய்யாரத் தோழி
                                                             (என் தேச)

உற்றுற்றுப் பார்க்கின்ற
ஒற்றை விழி ஒன்று
ஒருபோதும் திறவாத
மர்மவிழி ஒன்று
பற்றுற்று நோகாமல்
பாலிக்கும் நின்று
பாதமே பாரென்று
பணிக்கின்ற தின்று
என்றைக்கும் என் வாழ்க்கை
நீகொண்ட கொள்ளை
எதுவந்து போனாலும்
என்றுமுன் பிள்ளை
சற்றைக்கும் அகலாமல்
சந்நிதியில் வாழ்வேன்
சங்கீத மணிகேட்டு
மலர்ப்பாதம் வீழ்வேன்
                                                                 (என் தேச)

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *