திருவானைக்கோவில் – அகிலாண்டேஸ்வரி

 

நீரினில் சிலையெடுத்து

நீலகண்டன் அருள்பெற்று

சிவஞானம் கேட்டறிந்த

சிவகாம சுந்தரியே !

 

தாடங்கம் காதணிந்து

தந்தமுகனை முன்கண்டு

தாயன்பைத் தரணிக்குத்

தந்தருளும் தயாநிதியே !

 

தாம்பூலம் வாயில் தந்து

தமிழினிலே சொல் தந்து

காளமேகம் கவி சொல்லக்

காவியம் படைத்தவளே !

 

திருநீறுச் சித்தனவன்

திண்ணமுடன் மதில்கட்ட

திருக்கோயில் கொண்டவளே

திருவரங்கன் சகோதரியே !

 

பாலுண்ணும் குழந்தைகூடப்

பாட்டெடுக்கும்  உனைக்கண்டால் !

பள்ளியறை செல்லாத உன் காதல்

பாடிடவே நாள்முழுதும் நவராத்திரி!

 

காவிரி நதியினில் நீராடிக்

கரையினில் வாழ்ந்திடுமுனைப் பாடிக்

கலங்கிடும் நெஞ்சங்கள் பல கோடி,

காத்தருள்,  தாயே!  நீ வாழி !

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *