கிரேசி மோகன்

images
———————————————————–

”தாலேலோ தாலேலோ தாயாரின் தாலாட்டு,
பாலேலோ பாலேலோ பையனிவன் -தாலேலோ,
தூங்காமல் தூங்கும் திருமால் சகோதரி
ஓங்காரி பாலாவுக்(கு) ஓய்வு”…….

ஆலோல வள்ளியின் ஆம்படையான் அன்னையே,
தாலேலோ பாடவந்தேன் தாயுனக்கு, -பாலேலோ,
மாலோலன் தங்காய், மனோன்மணி கண்ணுறங்கு,
காலேல கண்மலர்ந்து கா

கா -காப்பாய்….

பொற்கரத்தில் மாலையும், புத்தகமும் ஏந்தியவா(று)
அற்புதங்கள் செய்ய அலைந்தனையே, -கற்பகமே,
கண்ணுறங்கு பாலேலோ,கால்வலிக்கப் போகிறது,
பண்ணுறங்கப் பாடுமெனைப் பார்

ஈசனிரு கண்ணை இறுகநீ மூடியதால்,
தேசம் இருண்டதே தேவியே ! -வீசிடும்
கண்ணிமைகள் பொத்தியதி காலை எழந்திடலாம்,
பெண்ணிமய பாலா படு

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *