ஓவியக்கவி கலில் கிப்ரான் கவிதைகள் – 30

0

சி. ஜெயபாரதன்.

கலில் கிப்ரான்

(1883-1931)

ஓவியக்கவி கலில் கிப்ரான் கவிதைகள்

மூலம் : கலில் கிப்ரான்

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

என்னை மயக்கியவள்
___________________

“நேற்று நாம் வேந்தருக்கு மண்டியிட்டு வந்தனம் செய்தோம் ! சுல்தான்களுக்குத் தலை குனிந்து வணக்கம் தெரிவித்தோம் ! இப்போது நாம் நற்பணியாளர் தவிர வேறு எவருக்கும் மதிப்பு அளிப்பதில்லை. மனித நேயத்துக்கும், அழகுத்துவம் தவிர வேறு எதனையும் நாம் வணங்குவதில்லை.”
கலில் கிப்ரான். (The Sons of the Goddess & the Sons of the Monkeys)
___________________

ஓடிப் போன என் காதலி
___________________

வாழ்க்கை என்பதோர் கவர்ச்சி மாது !
வீழ்த்தி விடுவாள் தன் எழிலைக் காட்டி !
விளையாட்டுத் தனத்தைத் தெரிந்தவன்
விலகிச் செல்வான் கவர்ச்சியை உதறி !
___________________

என்னிதயம் நேசித்த
அந்த மாது
ஓடிப் போய் விட்டாள் !
ஏதோ ஓரிடத்துக்கு
குளிர்ப் பிரதேசம் அது !
எவரும் வசிக்க முடியாத
இடம் அது !
வெகு தூரத்தில் உள்ளது !
___________________

என்னிதயம் காதலித்த
அந்த மாது
“இல்வாழ்க்கை” எனப்படுவது !
எழிலானவள் அவள்
எவரையும்
கவர்ந்து தன்வசம் இழுப்பவள் !
நமது உயிரைப்
பகடை ஆடுபவள் அவள் !
வாக்குறுதி களைப்
காக்காமல்
நழுவிச் செல்பவள் அவள் !
___________________

“இல்வாழ்க்கை” என்பது
காதலர் சொட்டும்
கண்ணீரில் குளிக்கும்
ஒரு வனிதை !
அவளது மாயத் துக்குப்
பலியாவோர்
சிந்தும் குருதியில்
ஞானக் குளிப்பு செய்பவள் !
இரவெனும் கரை பூண்ட
வெண்ணிறப் பகல் ஆடை
உடுத்தியள் அவள் !
மனித இதயத்தைக்
காதலனுக்குப்
பணிய வைப்பவள் அவள் !
ஆனால்
தனக்கு மட்டும்
திருமணம் முடிய
மறுப்பளிப் பவள் அவள் !
___________________

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *