-மீ.விசுவநாதன்

மழையில் நனைந்தால் சிவனே
மனதில் உன்னை நினைப்பேன் !                  shiva
அழைப்பேன் ருத்ரம் சொல்லி
அதிலும் குளித்து மகிழ்வேன் !
உழைக்கும் போதும் சிவனே
ஒளியாய் ஒன்றிப் பணிவேன்
பிழைப்புக் காக உன்தாள்
பிடிக்க மாட்டேன் சிவனே !

என்னை நினைக்கும் உன்னை
என்னுள் வைத்தேன் நன்றாய்
முன்னை வினையின் தொடரை
முடித்து வைப்பாய் சிவனே !
தன்னை உணர்ந்த நிலையைத்
தருவாய் எனக்கு என்றே
சென்னி மேலே உன்தாள்
சிந்தை செய்வேன் சிவனே !

( அரையடி வாய்பாடு: மா,மா,மா  )

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *