க. பாலசுபிரமணியன்

amurugan-03

சுட்ட பழம் தருவாயோ?  சுடாத பழம் தருவாயோ?

சுட்ட பழம் தருவாயோ? சுடாத பழம் தருவாயோ? — முருகா

 

ஆணவத்தை சுட்டெரித்துக் கொஞ்சம் அனுபவத்தைத் தந்தாய்,

அனுபவத்தை சுட்டெரித்துக் கொஞ்சம் அறிவினையே தந்தாய்,

அறிவினையும் சுட்டெரித்துக் கொஞ்சம் அமைதியினைத் தந்தாய்,

அந்த அமைதியிலே நீ அருட்சுடராய் நின்றாய் !!

 

சொந்தமெல்லாம் சுட்டதென்று உன் காலைப்பிடிதேன் –

பந்தமெல்லாம் சுட்டதென்று உன் வேலைப்பிடிதேன்

மோகமென்னைச் சுட்டதென்று  உந்தன் சொல்லைப்பிடிதேன்-முருகா

வாழ்க்கை சுட்டெரிக்கச் சுட்டெரிக்க சுற்றி சுற்றிப் பிடித்தேன்!!

 

அவ்வையவள் பாட்டினைக் கேட்டிடவே ஆடி ஆடி வந்தாய்,

அருணகிரி புகழ் கேட்டிடவே ஓடி ஓடி வந்தாய்,

அடியார் தம் துயர் தீர்க்க தேடித்தேடி வந்தாய்-

அகிலமெல்லாம் ஏங்குதையா. இன்று எங்கு சென்றாய் ?

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *