ஒரு முருக பக்தர் ‘’இறுமலு ரோக முயலகன் வாத மெரிகுண நாசி-விடமேநீ’’ என்ற ‘’திருப்புகழ் மந்திரத்தை’’ வாட்ஸ்-அப்பில் அனுப்பியிருந்தார்….அருணகியார் வாக்கில் சொக்கினேன்….முன்பு எழுதிய பெருமாள் திருப்புகழ் நினைவுக்கு வந்தது….அதைப் பகிர்கிறேன் தங்கள் வாசிப்புக்கு….அன்புடன் கிரேசி மோகன்….

பெருமாள் திருப் புகழ்….

images (1)

தனதான தத்தன தனதான தத்தன
தனதான தத்தன -தனதான

பொது
——–

“கபவாத, பித்தமும், சளிதோஷ சத்தமும்,
தலைநோவும் ,ரத்தமும் -வெளியேறும்
குதமூல பெளத்ரமும், நகம்மீது சுத்தியும்,
படர்சோகை, மக்கிடும் -விழிபார்வை

சபைநாற வைத்திடும் சனிவாயில் சொத்தையும்,
உமிழ்நீர்தெ றித்திட -உருள்நாவும்,
செரிமானம் அற்றிட பிரிவாய்(வு)அ சுத்தமும்,
சொறிநோய்அ ரிப்பதும், -இதுபோக

அபவாத புத்தியும், மமகார சித்தமும்,
அவதூறு ரைத்திடும் -விடநாவும்,
அணுகாது சத்துவ மனமேனி உற்றிட
அலைமேல்ப டுத்திடும் -மணிமார்பா

மதுகேசி, சக்கிரன், முலைபூதம், சர்ப்பமும்,
சிசுபால வர்க்கமும், -முறைமாமன்
தரைசாய இத்தரை அவதார முற்றனை,
அருளாய்யெ னக்கரி -பெருமாளே”….கிரேசி மோகன்….
——————————————————————————————-

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *