-மலர் சபா

மதுரைக் காண்டம் – 06: கொலைக்களக்  காதை 

கல்லாக் களிமகன் ஒருவன் வாளால் எறிய, கோவலன் குருதி சோர மண்ணின் மேல் மாண்டு விழுதல்

அதனைக் கேட்ட கல்வியறிவில்லாத
கொலைபாதகத்துக்கு அஞ்சாத
மூடன் ஒருவன்
தன் கையில் உள்ள வெள்ளிய வாளால்
கோவலனை வெட்டினான்.

அவ்வெட்டானது கோவலன் உடலில்
குறுக்கே பாய்ந்து அறுத்தது.
வெட்டுப்பட்ட புண்ணிலிருந்து
குருதி கொப்பளித்து சுற்றிலும் பரவியது.

நிலமங்கை மிக்க துயரம் அடைய,
மன்னனுடைய செங்கோல் வளைந்து நிற்க,
முன்செய்த ஊழ்வினை முதிர்ந்து நிற்கக்
கோவலன் வெட்டுண்டு வீழ்ந்தான்.

வெண்பா 

பாண்டிய மன்னன் முன்செய்த தீவினையால்
எப்போதுமே வளைந்திடாத
அவன் செங்கோல்
கண்ணகியின் கணவன்
கோவலன் கொலை காரணமாய் வளைந்தது.

உலக மக்களே!
இதன் மூலம் நீவிர் செய்த
நல்வினை தீவினை
இவ்விருவினைகளின் பயனும்
அவற்றைச் செய்தவரைத்
தப்பாது வந்து சேரும்,
இதை உணர்ந்து
நல்லதையே செய்வீர்களாக!

அடிப்படையாக அமைந்த சிலப்பதிகாரத்தின் வரிகள் இங்கே: 212  – 218

கொலைக்களக் காதை முற்றியது. அடுத்து வருவது ஆய்ச்சியர் குரவை

http://ilakkiyam.com/sangailakkiyam/23-tamil/iyal/sangailakkiyam/pathinenmerkanaku/ettuthogai/pura-nanooru/1133-kolaikalakathai

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *