கிரேசி மோகன்

akm

தனந்த தானனத்த தனந்த தானனத்த
தனந்த தானனத்த -தனதான
கும்பகோணம்
———————
பெருமாள் திருப் புகழ்….
“அகந்தை வேரறுத்தவ் விழந்த வான்கிடைத்திங்
கிருந்த வாறிருக்க -ரமணேசர்
புகன்ற வாசகத்தை உணர்ந்து மாதவத்தை
நெருங்க ஞானவித்தை -அருள்வாயே
அகன்ற சாகரத்தில் அனந்தன் மேலிருக்கை
அமைந்த யோகநித்ரை, -வனமாலி
சுகந்தம் வீசலக்மி பதங்கள் மேவநித்ய
இனங்கள் சூரிநிற்க -பயில்வோனே
தகுந்த வாறளிப்பு ,சினந்த மாமனுக்கு
இகழ்ந்த பாலனுக்கு -முறைவாசல்,
தினங்கள் போயெமர்க்கை விழுந்து சாவதற்குள்
முகுந்த வாவகத்துள் -குடியேற
புகுந்த ஆழிவிட்டு பருந்து வாகனத்தில்
பறந்து வாயெனக்கு -துணையாக
உயர்ந்த கோபுரத்துள் கிடந்து வாழவைக்கும்
குடந்தை மாநிலத்து -பெருமாளே”…

 

பெருமாள் திருப் புகழ்….

 

தந்ததான தான தான தந்ததான தான தான
தந்ததான தான தான -தனதான

 

கும்பகோண ராமசாமி பெருமாள்
—————————————

“எம்பிரானும் வேதம் ஓதும் அன்னவாக னாரும் காண
மண்ணைவானை மீறு மேனி -கிரிசோணை
தன்னில்தேக வாசம் போக அன்றுஆல வாயில் சாவை
வென்றுதீர னாக மேவு -ரமணேசர்

கொம்புஞானம் காண காலில் தெம்பிலாத மூடன் வாயில்
கொஞ்சமேனும் தேனை சேர -அருள்வாயே
கங்கையோடன் தோள்கு லாவி அஞ்சுமானை நீயும் கூட
என்றுகூறு தோழ பாவ -ரகுராமா

அண்ணல்சோகம் தீர வானில் பொங்குமாழி மீது தாவி
அன்னைவாழும் சேதி கூறும் -அனுமானின்,
அஞ்சனாவின் சேயின், வாயு மைந்தனாரின், வாசி ஈசன்
அம்சனாரின் நேச மான -சகவாசன்

நம்பினோர்கள் நாளில் கோளில் துன்புறாது கோயில் வாசல்
அன்பினோடு தாழி டாது -சிலையோடு
அம்புறாவும் தோளில் ஆட தம்பியோடு தாரமொடு
கும்பகோண ராம சாமி -பெருமாளே”….(31)
————————————————————————

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *